புதன், 21 டிசம்பர், 2016

aragalur-ஆண் ஊதா தேன் சிட்டு

வழக்கமாய் 7 மணி வரை தூங்கும் பழக்கம் உடையவன் நான்..இரவு படித்து விட்டு தூங்க 12 மணி ஆகிவிடுவதால் காலை சீக்கிரம் எந்திரிக்க முடிவதில்லை...ஆனால் சில நாட்களாய் காலை 5 மணிக்கே மணிக்கே ..கீச்..கீச்..என பறவைகளின் சத்தம் கேட்டு விழிப்பு வந்து விடுகிறது...எழுந்தவுடன் பறவை சத்தம் கேட்பதில்லை...அருகே பறவைகளே இல்லை..அதுக்கு மேல் தூங்க பிடிக்காமல் காமிராவை கையில் தூக்கிக்கொண்டு புறப்பட்டால்...மைனா,காக்கா,மீன் கொத்திதான் நிறைய கண்ணில் தட்டுப்படுது...வித்தியாசமா பாக்காத ஒரு பறவையையை படம் எடுக்கணும் என காட்டுப்பக்கம் சுத்திகிட்டு இருந்தப்ப ஒரு மஞ்சள் அரளிப்பூ நடுவே சின்ன சலசலப்பு...கொஞ்சநேரம் உத்துப்பாத்ததில் குட்டியா ஒரு பறவை ஒரு இடத்தில் 10 நொடிக்கு மேல் அது உட்காரல...
அரைமணி நேர பெருமுயற்ச்சிக்குப்பின் என் காமிராவின் கண்ணில் சிக்கியது...இந்த பறவையின் பெயர் ஆண் ஊதா தேன் சிட்டு