திங்கள், 20 மே, 2019

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

வரஞ்சரம் லகுலீசர்

10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு
   
எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக இருப்பாரோ என தோன்றியது .உடனே திரு சுகவனமுருகன் சாருக்கு அனுப்பி சார் இவர் அவரா ? என கேட்டேன். ஆகா அவரேதான் இவர் என்று உறுதிப்படுத்தினார்.
                              பின் சில நாட்கள் கழித்து வீரராகவன் சார்,சுகவனமுருகன் சார், நான் மூவரும் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து அவர் லகுலீசர்தான் என உறுபடுத்திக்கொண்டோம். அக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் உள்ள இடங்கை தொடர்பான ஒரு கல்வெட்டு ஆவணத்தில் திரு பன்னீர்செல்வம் அவர்களால் 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லகுலீசர் யார் ? எங்கு தோன்றினார் ? எப்படி பரவினார் என்பது பற்றி தமிழகத்தில் லகுலீச பாசுபதம் என்ற நூலில் வீரராகவன் ஐயா Manonmani Pudhuezuthu Mangai Ragavanஆகியோர் விரிவாக எழுதி உள்ளனர்.
இப்ப நம்ம வலஞ்சரம் லகுலீசரைப்பற்றி பார்போமா

1200 ஆண்டுகள் பழமையான லகுலீசர் சிற்பம்
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவனமுருகன் ஆசிரியர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்கம் வட்டத்தை சேர்ந்த வரஞ்சரம் என்ற ஊரில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அந்த ஊரில் உள்ள பசுபதீஸ்வரர் என்ற பழமையான சிவன் கோயிலில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிற்பத்தையும்,கதிர் பிள்ளையார் சிற்பத்தையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
                                   லகுலீசபாசுபதம்:-
சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம் என்ற பிரிவானது சங்ககாலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பாசுபதமானது குஜராத் மாநிலம் காயாரோஹனம் என்னும் இடத்தில் லகுலீசர் என்பவரால் துவங்கப்பட்டு அவரின் சீடர்கள் கெளசிகர், கார்கி, கெளதமன் என்பவர்கள் மூலம் இந்தியா முழுக்க பரவியது.தமிழகத்தில் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் இந்த மதம் வேர் விடத்துவங்கியது. லகுலீசரின் சமயத்தத்துவங்கள் பாசுபதசைவம் என்ற பெயர் பெற்றன.இந்த பிரிவை பின்பற்றுவவர்கள் விபூதியில் குளிக்க வேண்டும்,சாம்பலில் படுத்து உறங்க வேண்டும், சாம்பலில் நடனமாட வேண்டும், பரமன் அணிந்த மாலைகளை அணிந்து கொள்ள வேண்டும்,தங்கள் சாத்திரங்களை பின்பற்றி கட்டப்பட்ட கோயில்களில்தான் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. கம்போடியா வரை லகுலீசபாகுபதம் பரவி இருந்தது. கி.பி 6 ஆம் நூற்றாண்டு துவங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்,பாண்டியர் குடவரைகள், முற்காலசோழர்களின் தனிச்சிற்பங்களாக லகுலீசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. சிவனின் 28வது அவதாரமாக லகுலீசர் அறியப்படுகிறார்.தமிழகத்தில் இதுவரை 20பதுக்கும் மேற்பட்ட லகுலீசர் சிற்பங்கள்தான் இதுவரை கிடைத்துள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்துள்ளன.அதில் புதிய வரவாக வரஞ்சரம் என்ற ஊரில் புதிய லகுலீசர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
வரஞ்சரம் லகுலீசர்:
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றின் தெற்கே வரஞ்சரம் என்ற ஊர் அமைந்துள்ளது. ஆறகழூர் கல்வெட்டுகள் இந்த கோமுகி ஆற்றை ஆழ்வினை ஆறு என குறிப்பிடுகிறது. வரஞ்சரம் என இப்போது அழைக்கப்படும் இந்த ஊர் 11 ஆம் நூற்றாண்டில் திருவலஞ்சரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவனை திருவலஞ்சரமுடையநாயனார் என குறிப்பிடுகிறது. இந்த கோயில் இப்போது பாலாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. அருணாசலகவிராயர் இயற்றிய திருவரஞ்சர தல புராணம் என்ற நூல் இக்கோயில் இறைவனைப்பற்றியும், இவ்வூரின் பெருமையையும் பற்றியும் பாடல்களாக விவரிக்கிறது.1200 ஆண்டுகளுக்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் செங்கல் தளியாக கட்டப்பட்ட இந்த கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கற்கோயிலாக மாற்றி கட்டப்பட்டுள்ளது. அப்போது செங்கலால் கட்டப்பட்ட கோயிலில் இருந்த லகுலீசர் சிற்பமும், கதிர் விநாயகர் சிற்பமும், தனி மாடத்தில் வைக்கப்பட்டு இன்று வரை வழிபாட்டில் உள்ளன. இங்குள்ள சப்த மாதர் சிற்பங்களும் மிகவம் பழமை வாய்ந்தவை ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் லகுலீசர் சிற்பமானது ஜடாமுனி என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. தனிமாடத்தில் அமர்த்தப்பட்டுள்ள லகுலீசர் 2 அடி உயரமும் முக்கால் அடி அகலமும் உள்ள ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளார். பல்லவர்கள் காலத்தை சேர்ந்த சிற்பம் இதுவாகும். தலையில் உள்ள ஜடாபாரமானது நீள் இழையாக இறுதியில் முடிச்சிடப்பட்டு சுருட்டை முடியாக காட்சியளிக்கிறது.காதுகளிலும்,கழுத்திலும் அணிகலன்கள் காணப்படுகிறது.தலையானது சற்று வலது பக்கம் சாய்ந்து முகம் புன்னகையுடன் காணப்படுகிறது. அர்த்தலீலாசனத்தில் அமர்ந்து வலதுகாலை சற்று உயர்த்தி தண்டத்தை வலதுகாலின் மீது ஊன்றியபடி உள்ளார். இடதுகால் வலதுகால் மடிப்பின் உள் நுழைந்தபடி உள்ளது. வலது கை தண்டத்தை உறுதியாக பற்றியுள்ளது.வலது கரத்தின் அருகே நீண்டு நிற்கும் பாம்பானது காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட லகுலீசர் சிற்பங்களிலேயே மிக அழகிய சிற்பம் இதுவாகும்.

                                                     கதிர் பிள்ளையார்
விழுப்புரம் மாவட்டத்தில் இது வரை லகுலீசர் சிற்பங்கள் கண்டறியப்பட்ட பெரும்பாலான இடங்களில் 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கையில் நெற்கதிர் வைத்திருக்கும் கதிர் பிள்ளையார் சிற்பம் காணப்படுகிறது. வரஞ்சரத்திலும் தனி மாடத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த கதிர் பிள்ளையார் காணப்படுகிறார். பிள்ளையார் பெரும்தெய்வமாக உருவாகாத காலகட்டத்தில் வளமையின் சின்னமாக பிள்ளையார் கருதப்பட்டு கையில் நெற்கதிருடன் வழிபாட்டில் இருந்துள்ளார்.
கல்வெட்டு
கி.பி. 1157 ஆம் ஆண்டு இரண்டாம் ராஜராஜனின் 11 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் காணப்படுகிறது. மிலாடாகிய ஜனநாத வளநாட்டு மேல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சரம் என இவ்வூரை குறிப்பிடுகிறது. 79 நாடுகளை சேர்ந்த சபையோர் திருவலஞ்சரத்தில் ஒன்று கூடி 11 நாட்டுப்பிரிவுகளை சேர்ந்த மலையமான்,நத்தமான் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இடங்கை என்ற பிரிவில் இணைந்து அப்பிரிவுக்கு கண்ணும் கையுமாக துணை நிற்போம் என உறுதி அளித்துள்ளனர். 12 ஆம் நூற்றாண்டில் ஒருவகை சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ந்ததற்கு சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


இந்த செய்தியானது நேற்றய தினமணி,தினகரன் நாளிதழ்களிலும், அவர்களின் இணையதளங்களிலும், இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலும் இணைய தளத்திலும், இணையப்பத்திரிக்கையான விகடன், நக்கீரன்,nntweb, ஆகியவற்றிலும் செய்தி வந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன், தினமணி திரு. சரவணன், தினமணி திரு முரளி,தினகரன் திரு பச்சையாப்பிள்ளை, இண்டியன் எக்ஸ்பிரஸ் திரு பகலவன், விகடன் திரு வெற்றி , nntweb திரு கதிரவன்,திரு நக்கீரன் பகவத்சிங், மக்கள்குரல் செய்தியாளர், ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வுமையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வளவு நேரம் பொறுமையாக செய்தியை படித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

                                          
இண்டியன் எக்ஸ்பிரஸ்
தினகரன்
தினமலர்

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/may/12/1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3150195.html?fbclid=IwAR1VFjsq5ljh7j5KJRkrTDhE70fjw9aZ-_E_VorXoo3ddZmWnCj9M4IANdE

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=494722&fbclid=IwAR0MIx0N_5gQHPZHCO-9BSIL7exlkw8WPNd_aE71YYOXKRDWENnT0xUIXCk


https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/1200-year-old-idol-discovered-kallakurichi?fbclid=IwAR2mTA9ABDYkH-E8-l0Mb-tDS96v7Grc6CYeqKPJufuYqU7WoCLlR_79_Y0

https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-1200-%E0%AE%86%E0%AE%A3/?fbclid=IwAR1JRqjDu-zr3vRxU_w8rgGXfibGFQrV2pPGWKReo5VlpzSMJ8DhR7ybmEU

https://www.vikatan.com/news/spirituality/157348-found-new-laguleesar-statue-near-kallakkurichy.html?fbclid=IwAR1VFjsq5ljh7j5KJRkrTDhE70fjw9aZ-_E_VorXoo3ddZmWnCj9M4IANdE

https://m.dinamalar.com/detail.php?id=2276063&device=whatsapp&fbclid=IwAR120pGcBzjuX96OotlPVF-ITQUD5l0HCmLxyqfFa_Y0cbgJsUA9PLxjdQI

https://xiaomi.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/tamizhakathil+1200+aandukal+bazhamaiyana+lakuleesar+sirbam+kandubidippu+badangal+-newsid-116068924?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa&fbclid=IwAR3t5cmt9kHEzAbtBNEEeQVOfK_q8hlVmYjFf9MDil-UZp2JRIdcGo-2U2I

தினமணி




இணைப்புகள்
http://www.nntweb.com/news-view.php?nid=1145&nalias=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%201200%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&fbclid=IwAR2iwLEd2GmpTlrLb3mFqkmykS93bSpAQnUjSZmMnR-e1vtd7jKwdVsxAxY






புதன், 1 மே, 2019

pottaneri- பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு

பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு



தமிழ் மொழியானது துவக்கத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்த போது ஒலியில் துவங்கி பின் குறியீடுகள்,சித்திரங்கள்,பாறை ஓவியங்கள் என தொடர்ந்து தமிழி,வட்டெழுத்து,என வளர்ந்து இன்று நாம் கானும் வடிவில் செம்மையடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மக்கள் தங்கள் உணர்வுகளை செய்திகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி என்ற கிராமத்தில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த செய்தி தினமணி,தினத்தந்தி நாளிதழ்களிலும், தினமணி,தினத்தந்தி,விகடன்,நக்கீரன்,சத்யம் ,பி.பி.சி,nntv web ஆகிய இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. செய்தியை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தினமணி சரவணன்,தினத்தந்தி திரு வேலுமணி,விகடன் வெற்றி, நக்கீரன் பகத்சிங் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

                                         
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
மேச்சேரியை சேர்ந்த கோ.பெ.நாராயணசாமி ஆசிரியர், வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.இராஜகோபால்,கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம்,சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவுன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.அப்போது அங்குள்ள வரதராஜபெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

                                                இக்கல்வெட்டின் உயரம் 70 செ.மீ. அகலம் 65 செ.மீ. தடிமன் 10 செ.மீ ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை. 8 வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டு உள்ளது. இதன் முதல் இரு வரிகளும் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாக கருதலாம். எழுத்தமைதியானது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது. கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும் பின் வட்டெழுத்திலும், 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டன.
வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால் நிலம் யாருக்கு, எதற்காக கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை. கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள் வாளாக இருக்கலாம்.
வாணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி,கிருஷ்ணகிரி,செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்து உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரை தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை நேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8 ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் ஒரு சமணதீர்தங்கரரின் சிலை காணப்படுகிறது. ஏற்கனவே தமிழக தொல்லியல்துறை இதை பதிவு செய்திருந்தாலும் தற்போது பாதுகாப்பு , பராமரிப்பு இன்றி உள்ளது.. சேலம் மாவட்டத்தில் சமணம் செழித்து இருந்தமைக்கு ஆதாரமாக ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோயிலில் சமணத்தை சேர்ந்த ஒரு தீர்த்தங்கரர், அம்பிகா யட்சி, வெள்ளக்கல்லால் ஆன ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. பொட்டனேரி தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இணையதள இணைப்புகள்

https://www.sathiyam.tv/inscription-found/?fbclid=IwAR2XED-RvWZ_U606M1QfcfuiGzz2tpI405EzQiRwrx8UEg7t1qV4oZIAM9Q

https://www.dinamani.com/tamilnadu/2019/apr/29/1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3142023.html?fbclid=IwAR2j29JrNG-5wWtcxZ7LIGBdfDCYeQtWjcwZR6GbOejK_FlVCRRBCK-giI8


https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-district-mettur-teacher?fbclid=IwAR3HdcPz-Yn9NDeYeH9f6UkPaeT7RafUZy3tejUGV8PlhwFxzU4Cz3UrO4E

https://cfcm.salemonline.in/article/1200-year-old-stone-inscription-found-in-potteneri-2858673?fbclid=IwAR1Ly32YP-KK8Yex5gAB3YXOt0nD-OvFYFvcuwpimzqUovPyqyi1RpVbu8k

http://www.nntweb.com/news-view.php?nid=1097&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%201200%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&fbclid=IwAR1fzobMWpajnOH7qDw0U3dwAloRiA6PIPQt-J1QI-q23Xwak-RxM1mOx7shttps://www.vikatan.com/news/spirituality/156278-found-new-vattezhuththu-inscription-found-near-mettur.html?fbclid=IwAR0VFMYLRwu-rh2ElNs_JqaL5eJSlGcLnJBo4pnUu04aZ5xLrmOh3t7yHCk








வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பெரியநெசலூர் கொற்றவை

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A.(PU.AD),M.A.(J.M.C),M.PHIL,D.PHARM
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்

விழுப்புரம் வீரராகவன் சார்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,பெரியநெசலூர் கொற்றவை


1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை கண்டுபிடிப்பு
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது ஆயிரத்திநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவையும் சில கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
 
பெரியநெசலூர் கொற்றவை கல்வெட்டுடன்
கொற்றவை
    சங்ககாலத்தில் இருந்தே கொற்றவை வழிபாடு இருந்து வந்துள்ளது.அக்காலங்களில் தாய் வழி சமூக அமைப்பு செயல்பட்டதை கொற்றவை வழிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களும்,தொல்காப்பியமும் கொற்றவையைப்பற்றி சில குறிப்புகளை தருகின்றன.சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரிகளில் கொற்றவையின் உருவ அமைப்பு,ஆயுதங்கள்,உடை,அணிகலன்கள்,வழிபாட்டு முறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கொற்றவை பாலை நிலக்கடவுளாக அறியப்படுகிறார்.காடுகளில் வசித்த வேட்டுவர்கள் தங்களது வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டுள்ளனர்.
   கொற்றவையானவர்பழையோள்,பாய்கலைப்பாவை,ஐயை,பைந்தொடிப்பாவை,ஆய்கலைப்பாவை,சூலி,நீலி,காடுகிழாள் என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறார். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில் ஐயை கோட்டம் என அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு மிகச்சிறப்பாக இருந்துள்ளது.பல்லவர்களின் கீழ் ஆட்சி செய்த வாணர்கள்,மலையமான்கள் போன்றவர்கள் பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.
       
பெரியநெசலூர் கொற்றவை மங்கமுத்தாயி அம்மன்

பெரியநெசலூர் கொற்றவை
பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலின் உள்ளே மேற்குப்புறத்தில் இந்தக்கொற்றவை தனி மேடையில் உள்ளது.ஆரம்ப காலத்தில் இது கருவறைக்குள் இருந்திருக்க கூடும்.இக்கொற்றவை கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது.பல்லவர்கள் வலு இழந்த 9 ஆம் நூற்றாண்டில் மலையமான்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இக்கொற்றவையின் உயரம் 102 செ.மீ,அகலம் 88 செ.மீ,தடிமன் 12 செ.மீ ஆகும்.ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.எருமைத்தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார்.தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்தரகுண்டலம்,கழுத்தில் சரபளி,சவடியுடன் புலிப்பல்லால் இணைக்கப்பட்ட தாலியை அணிந்துள்ளார்.மார்புக்கச்சை பட்டையுடன் உள்ளது.மார்பில் சன்னவீரம் உள்ளது.இந்த சன்னவீரம் என்பது போர் கடவுள்கள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும்.வலதுபுற மேல்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமான மானும் சிங்கமும் உள்ளது. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக்கரங்களுடன் உள்ளார்.வலது பின்புறகரங்களில் எறிநிலைச்சக்கரம்,வாள்,பாம்பு காணப்படுகிறது. கையில் பாம்புடன் ஒரு கொற்றவை கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும்.முன்கரம் அபய முத்திரையில் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயமும் முன்கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. யானைத்தோலை போர்த்தி இடுப்பில் புலித்தோலால் ஆன மேகலையை அணிந்துள்ளார்.முழு ஆடை உள்ளது.இடப்புற காலில் சிலம்பும்,வலப்புற காலில் கழலும் அணிந்துள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது தன்னுடைய நாடு போரில் வெற்றி பெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு தன் தலையை தானே வெட்டி பலி கொடுத்துக்கொள்வதாகும்.இடப்புறம் கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார்.



தினமணி செய்தி

மூன்றாம்குலோத்துங்கன் கல்வெட்டு

கல்வெட்டு
எருமைத்தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது.
ஸ்ரீ முக்குல மலையமான் சாதன்
என கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக்கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மலையமான்கள் சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரை தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்.சிலகாலம் சுதந்திரமாகவும் சிலகாலம் பல்லவர், சோழர்,பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும்.



ஸ்ரீ முக்குலமலையமான் சாதன்

சிவன் கோயில் கல்வெட்டு

மங்கமுத்தாயி அம்மன் கோயில் அருகே ஏரிக்கரையின் கீழ் ஓர் சிவன் கோயில் இருந்து அழிந்து போய் உள்ளது.ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் துண்டுகற்கள்,தூண்களில் சில கல்வெட்டுகள் உள்ளன.
சோழர்காலம்
ஒரு துண்டு கல்லில் திரிபுனசக்கரவத்திகள் மது கருவூரும் பாண்டியன் முடித்தலையும் குலோத்துங்க சோழ தேவற்க்கு என உள்ளது. இது சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கசோழரின் மெய்கீர்த்தியாகும்.இதன் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் சோழர்களின் ஆட்சி நிலவியது உறுதியாகிறது.
பாண்டியர் காலம்
இங்குள்ள ஓர் உடைந்து போன தூணில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியரின் கல்வெட்டு 13 வரிகளில் காணப்படுகிறது.கல்வெட்டின் நடுவே பாண்டியரின் அரசுச்சின்னமான இரட்டை மீன் நடுவே செண்டு புடைப்பாக பொறிக்கப்பட்டுள்ளது.பாண்டியத்தேவர் என்பவர் தானமாக கொடுத்த திருநாமத்துகாணி நிலத்தை முதலீடாக கொண்டு இராசாக்கள் மண்டபம் என்ற ஒரு மண்டபத்தை கட்டிக்கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது.அந்த மண்டபம் தற்போது அங்கு இல்லை, முற்றிலுமாக அழிந்து விட்டது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/04/18134048/Message-to-the-Malayaman-kala-kottravai.vpf?fbclid=IwAR1x8s0nv7n6nhQOk8lt43efsHS8-dy0tP6cKdgHfNaU-evijc30x5cUc_A


https://www.vikatan.com/news/spirituality/154942-found-new-kotravai-statue-and-inscriptions.html


https://www.nakkheeran.in/special-articles/special-article/1100-years-old-kotravai-statue-found


https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/apr/12/1100-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3131712.html


http://www.nntweb.com/news-view.php?nid=1023&nalias=1100%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88!






சனி, 9 மார்ச், 2019

காட்டுமயிலூர் கொற்றவை

மருத்துவர் பொன்னம்பலம்
ஆறகழூர் பொன்,வெங்கடேசன்
காட்டுமயிலூர் கொற்றவை

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாற்றை சொல்லும் கொற்றவை


காட்டுமயிலூர் கல்வெட்டுகள்
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஆகியோர் அடங்கிய குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர் அப்போது, காட்டுமயிலூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை ஒன்றையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்தப்பகுதியின் பழமையையும் வரலாற்றையும் இந்த கொற்றவை சிற்பம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கோயில்

கொற்றவை

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன.சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.

காட்டுமயிலூர் கொற்றவை

இக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவரையில் இக்கொற்றவை தற்போதும் செல்லியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. பல்லவர்கள் வலுவிழந்த 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இதை கருதலாம். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார். மார்புக்கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம்,எட்டு கரங்களுடன் காணப்படுகிறார்.வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபய முத்திரையிலும் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் காட்டப்பட்டுள்ளது. கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்து கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான்.இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார்.கொற்றவையின் வாகனமான சிங்கமும்,மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி உள்ளது. எருமைத்தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார்.
காட்டுமயிலூரில் உள்ள திருக்கரம்தோன்றீசுவரர் கோயிலில் உள்ள பாண்டியர்கால கல்வெட்டுகள் மூலம் இந்த ஊர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது

கொற்றவைதொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் என கொற்றவை குறிப்பிடப்படுகிறது.கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக கொற்றவையை வழிபட்டுள்ளனர். பாய்கலைப்பாவை என்றும் கொற்றவை அழைக்கப்பட்டார்.பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன.சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.காட்டுமயிலூர் கொற்றவைஇக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் கருவரையில் இக்கொற்றவை தற்போதும் செல்லியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. பல்லவர்கள் வலுவிழந்த 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக இதை கருதலாம். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 132 செ.மீ,அகலம் 73 செ.மீ ஆகும். தலையில் கரண்ட மகுடம்,காதுகளில் பத்ரகுண்டலம்,கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்களுடன் காணப்படுகிறார். மார்புக்கச்சை பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது.பின்புறம் சூலம்,எட்டு கரங்களுடன் காணப்படுகிறார்.வலது பின்கரங்களில் பிரயோக சக்கரம், நீண்டவாள், மணி போன்றவையும், வலது முன்கரம் அபய முத்திரையிலும் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு,வில்,கேடயம் போன்றவையும் உள்ளது. இடது முன்கரம் கடியஸ்த நிலையில் உள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் காட்டப்பட்டுள்ளது. கீழ் வலது புறம் நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளார். போரில் வெற்றி பெற தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களை வெட்டி கொற்றவைக்கு படையலிட்டு தன்னைத்தானே பலி கொடுத்து கொள்பவன் நவகண்ட வீரன் ஆவான்.இடது புறம் வணங்கிய நிலையில் அடியவர் ஒருவர் உள்ளார்.கொற்றவையின் வாகனமான சிங்கமும்,மானும் வீரர்களுக்கு மேற்புறம் உள்ளது. கொற்றவையின் தலைக்கு அருகே இடது புறம் கிளி உள்ளது. எருமைத்தலையின் மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்டப்பட்டுள்ளார்.காட்டுமயிலூரில் உள்ள திருக்கரம்தோன்றீசுவரர் கோயிலில் உள்ள பாண்டியர்கால கல்வெட்டுகள் மூலம் இந்த ஊர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது
விழுப்புரம் வீரராகவன் ஐயா
மூன்றாம் மாறவர்ம திருபுவன சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டானது காட்டுமயிலூர் கோழியூர் பற்றின் கீழ் இருந்ததை குறிப்பிடுகிறது.  இறை வழிபாடு, படையல், திருப்பணிக்கு நன்செய் நிலம் இரண்டு மாவும் புன்செய் நிலம் நான்கு மாவும் தரப்பட்டுள்ளன. இது கல்வெட்டிலும் செப்பேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேடு தற்போது கிடைக்கவில்லை. சோழகங்கதேவன் என்பவர் இங்கு ஒப்பில்லா முலைநாச்சியார் என்ற அம்மன் கோயிலை ஏற்படுத்தி நிலதானம் செய்துள்ளார். இந்த சோழகங்கதேவன் என்பவர் வாண கோவரையனிடம் பணியாற்றிய தளபதியாய் இருக்க வாய்ப்புள்ளது. எராங்குடையான், பல்லவராயன் என்ற அதிகாரிகள் இதில் கையொப்பம் இட்டு உள்ளனர். இக்கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் உள்ள பிள்ளையார் சிலையின் அடியில் உள்ள கல்வெட்டில் இருங்கோளப்பாடி நாட்டு பாணப்புற பற்றை சேர்ந்த கொற்றலூரில் பல்லவன் சேதிராயன் என்பவர் ஏரி வெட்டுவித்த செய்தியும் உள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் யானையின் வடிவம் உள்ளது


செவ்வாய், 1 ஜனவரி, 2019

ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு-aragalur

வீரராகவன் சார், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு





நவகண்டமும் கல்வெட்டும்
தினகரன் செய்தி
ஆறகழூர்
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மகதை மண்டலத்தின் தலைநகராய் ஆறகழூர் இருந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்தது. இருப்பினும் இங்குள்ள கோயில்களும் ,கல்வெட்டுகளும் தம் பெருமையை இன்னும் நிலை நாட்டிக்கொண்டு உள்ளன.


காடுகளிலும், வயல்வெளிகளிலும் இன்னும் வரலாற்று சான்றுகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்படி வயல்களில்,வரப்பில் இருந்த 5 கல்வெட்டுகளை சேலம் வரலாற்று ஆய்வு மையம் கடந்த சில ஆண்டுகளில் கண்டறிந்து வெளிப்படுத்தியது. ஊருக்குள் வெளிப்பாளையம் என்ற இடத்தில் வயலுக்கு உள்ளே ஒரு நவகண்ட சிற்பம்
இருந்தது.அதை பல முறை பார்த்துள்ளேன்.அதை சுற்றி எப்போதும் புல் முளைத்து கிடக்கும்.சமீபத்தில் அந்த இடத்தை சுத்தம் செய்த போது ஒரு எழுத்துள்ள கல் இருப்பது தெரிந்தது. எங்க ஊர் பையன் ஒருவர் அதை முகநூலில் பதிவு செய்ய ,அன்பு மகள் கெளதமி அது குறித்து தகவல் தெரிவித்தார். பின் நம் ஆய்வு மையம் சார்பில் அக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு இன்று செய்தி வெளியிடப்பட்டது.
தினமணி செய்தி
நவகண்டமும் கல்வெட்டும்
குற்றவாளிகள் குடியேற்றத்தை தடை செய்ததை சொல்லும் ஆறகழூர் கல்வெட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாரயணன்,கவிஞர் மன்னன்,புலவர் வீராசாமி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆறகழூர் வெளிப்பாளையம் அருகே உள்ள விளைநிலத்தில் கல்வெட்டு ஒன்றும்,நவகண்ட சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
கல்வெட்டு
95 செ.மீ நீளமும்,37 செ.மீ அகலமும்,20 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.முன்பக்கம் 16 வரிகளிலும் பின்பக்கம் 23 வரிகளிலும்,பக்கவாட்டில் 9 வரிகளிலும் கல்வெட்டு மூன்று பக்கங்களில் உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் என கல்வெட்டு துவங்குகிறது.இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். ஆறகழூரில் இதுவரை தொல்லியல் துறையால் 48 கல்வெட்டுகளும், சேலம் வரலாற்று ஆய்வுமையத்தால் 5 கல்வெட்டுகளும் படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் இல்லாத சில புதிய செய்திகளை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. ஆறகழூரை மலாடாகிய ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்து ஆறகழூர் என எல்லா கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டானது மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர் என குறிப்பிடுகிறது.சோழர்கள்,வாணகோவரையர்கள்,பாண்டியர்கள்,விஜயநகரபேரரசு,நாயக்கர்கள் கல்வெட்டுகள் மட்டுமே இது வரை கிடைத்துள்ளது. வாண்டையார்களின் கல்வெட்டு இப்போதுதான் முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த வாண்டையார்கள் நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர்.
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்கு குமாரபாளையம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்ல குடியை சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாக குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வீடுகளில் துளையிட்டு திருடும் கன்னமிட்டவன், பயணத்தின் போது வழிமறித்து திருடும் வழிப்பறிச்சவன்,மற்றவர்கள் பொருட்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களை செய்பவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது என ஆணையிட்டு உள்ளனர். அங்கு குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்சியாக வாழ்வார்கள்.இந்த தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள்.இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
நவகண்ட சிற்பம்


இந்த கல்வெட்டுக்கு அருகிலேயே ஒரு நவகண்ட சிற்பமும் காணப்படுகிறது.போரின் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவைக்கு தன் உடலின் ஒன்பது பாகங்களை அரிந்து படையல் இட்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்டுள்ள நவகண்ட சிற்பம் இதுவாகும்.இந்த வயல்வெளியில் கறுப்பு சிகப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. எனவே இந்த இடம் முன்பு மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்தது உறுதியாகிறது. இந்த பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வாண்டையார் கல்வெட்டு

http://cfcm.salemonline.in/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81---2614798?fbclid=IwAR3h3t4Qb8cbIncSASfjh58h22CRshFJFN_F_2AxYpd2aWgNaJ3mgHkZf9c

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/28/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3066497.html?fbclid=IwAR2pP_GQoyqYCDg4gcI7NmPeFDoUvyGNdStLmfdeoUCC5HpcAY1eKuc6rAE

https://www.vikatan.com/news/tamilnadu/145739-new-inscription-stone-discovered-near-salem.html