கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை மரபுநடை

#ஆத்தூர்கோட்டைமரபுநடைஅக்டோபர்9

இன்றைய நிலையில் சமவெளியில் தமிழ்நாட்டில் இருக்கும் கோட்டைகளில் அழகும் சிறப்பும் வாய்ந்த கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. இது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது..இதற்கான அறிவிப்பு கோட்டைக்குள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது..பழுதடைந்த கட்டிடங்களையும் கட்டுமானங்களையும் தொல்லியல் துறை ஓரளவு சரி செய்து வருகிறது..
10 ஆம் நூற்றாண்டு முதலே ஆற்றூர் என்று அழைக்கப்பட்டுள்ளது..மைசூர் ஆட்யின் போது அனந்தகிரி என கொஞ்சகாலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது..தற்போது ஆத்தூர் என்று அழைக்கப்படுகிறது...
ஆத்தூர் வசிஷ்டநதியால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது..
ஆற்றுக்கு கிழக்கில் இருந்து தெற்காக பரவியுள்ள பகுதி புதுப்பேட்டை..பழையப்பேட்டை,ராணிப்பேட்டை
ஆற்றுக்கு வடக்கே கோட்டையும் முள்ளுவாடி(முல்லைவாடி..?) பகுதியும் உள்ளது..இந்த முல்லைவாடி பகுதியில் கோட்டையில் பணிபுரிந்த அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் குடியிருந்ததாய் ஓர் தகவல் உண்டு
ஆத்தூர் கோட்டை சதுரவடிவில் அமையப்பெற்று புற அரண் கட்டுமானங்கள் ..மதில்சுவர் தொடர் வளைந்து திரும்பும் முனைகளிலும், மதிலுக்கு ஒட்டினார் போல் உள்ளது.. புற அரண்கள் வட்ட வடிவ உருண்டை கட்டுமானங்களாக உள்ளது..
இந்த கோட்டையை கட்ட கற்கள் அருகிலிருந்த கல்வராயன் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்..
கோட்டைக்குள் இதுவரை இரண்டு தானிய கிடங்குதான் உள்ளது என நினைத்திருந்தேன்...ஆனால் மூன்றாவதாய் ஓர் தானிய கிடங்கு உட்புறமாக முழுமையாய் நல்ல நிலையில் இருப்பதை நேற்றைய கள ஆய்வில் கண்டேன்..
கோட்டையை சுற்றிலும் ஆற்றின் இரு கரையிலும் நிறைய கோவில்கள் உள்ளன..
காளியம்மம்,செல்லியம்மன்,கைலாசநாதர் கோயில், மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும்
கோட்டைக்குள் காயநிர்மலேஸ்வரர்( திருமேற்றளி நாயனார்) கோயில்,பெருமாள் கோயில்,விநாயகர் கோயில் போன்றவை உள்ளன..
ஆறகழூர் வெங்கடேசன் பொன்





வெள்ளி, 16 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை

இன்றைய தேடலில் கிடைத்த பொக்கிசம்
-----------------------------------------------------------------
காலை 6 மணி சைக்கிள் மெல்ல உருண்டுகொண்டு சென்றது...உடற்பயிற்சிக்காக ஓட்டிய சைக்கிள் வேகம் எடுக்கவில்லை..ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்...கால்கள் பெடல்களை மிதித்துகொண்டும் பார்வை சாலையை நோக்கி இருந்தாலும் மனம் என்னவோ வரலாற்றை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது...
கோட்டைக்கு போலாமா..?
எங்கிருந்து குரல்வருது...!சுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமில்லை..
ஓ..மைண்ட்வாய்ஸ்சுன்னு நெனைச்சி நான் தான் சத்தமா பேசிட்டேன் போல :-)
சைக்கிள் கோட்டையை நோக்கி விரைந்தது...
வசந்த மண்டபத்தின் அருகே உள்ள வீடுகளில் விசாரிக்க துவங்கினேன்
ஏங்க இங்க எதாவது பழங்கால பொருட்கள் இருக்க..?
நீங்க யாரு..?
ஏங்க 10 நாள் முன்பு ஊரும் உணவும் நிகழ்சிக்காக வந்தேனே...
ஓ நீங்களா..!!!1
நிகழ்சி நல்லாருந்திசி..கோட்டைய நல்ல காட்டிருந்தாங்க
எங்க நன்றியையையும் மகிழ்சியையும் Madona Janani க்கு சொல்லிடுங்க....எங்க அப்பா கூட கோட்டையை பத்தி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்...ஆனா இப்ப அந்த புத்தகம் ஒண்ணு கூட இல்லை..
எப்படியாவது ஒண்ணு எனக்கு வேணுமே...
சரிங்க அப்பாகிட்ட கேட்டு பாக்கிறேன்..
என்கிட்ட ஒரு கல்லுதான் இருக்கு ஆகுமான்னு பாருங்க...
வாவ்..வாவ்....சூப்பர்....இது கல் பீரங்கி குண்டுங்க..
ஓ..அப்படியா..????
நாங்க 10 வருசம் முன்பு இங்க வீடுகட்ட குழி தோண்டியபோது 3 பெரிய பானை (முதுமக்கள்தாழி)கிடைச்சுது அது எடுக்கும்போது உடைஞ்சி போச்சி...அதுக்குள்ள எலும்பு ,ஊசி எல்லாம் இருந்திச்சி..
சூப்பரூஊஊஊஊஊ
அது எல்லாம் இருக்குங்களா..?
இல்லிங்க..அதையெல்லாம் அப்பவே தூக்கிபோட்டுட்டோம்...
அந்த ஊசி மட்டும் வச்சிருந்தோம்...பையன் ஸ்கூலுக்கு எடுத்திட்டு போனபோது தொலைச்சிட்டான்...
அச்சச்சோ.....எல்லாம் மிஸ்ஸாகுதே....நாமதான் ரொம்ப லேட்டு...
கல் பீரங்கி குண்டை மட்டும் பாத்த திருப்தியோட திரும்பி 
சூடா இரு இஞ்சி டீ குடிச்சிட்டு வாக்கிங்கை முடித்தேன்







ஆத்தூர் கோட்டையில் கல் பீரங்கி குண்டு