king லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
king லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 மே, 2017

சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் -3


                       சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் - 3



சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் - 3
கெட்டி முதலிகள்
கெட்டி வம்ச அரசர்களின் தலைநகர் அமரகுந்தி.
ஆட்சிகாலம் கி.பி.1539 முதல் 1689 வரை 150 ஆண்டுகள் ஆகும்.
மதுரை நாயக்கர்களின் கீழ் இவர்கள் ஆட்சி இருந்தது.
சங்க காலம் முதலாகவே இந்த கெ(க)ட்டிகள் இருந்தார்கள் என தெரிகிறது.

வணங்காமுடி முதலியார், இம்முடி கட்டி, சீயாலக்கட்டி,இம்முடிகட்டி 2, வணங்காமுடி கொமாரக்கட்டி ஆகியோர் முக்கியமானவர்கள்.





தாரமங்கலம் இவர்களின் தலமையிடமாக இருந்துள்ளது.ஹெய்சாளர்கள் ,பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இப்பகுதியில் ஊர் தலைவர்களாக இருந்தவர்கள் இந்த கெட்டி முதலிகள் என வரலாற்று ஆய்வாள்கள் கருதுகின்றனர்.
மதுரை நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என்றழைக்கப்படு தாரமங்கலத்தை தலமையிடமாக கொண்டு கட்டிமுதலி என்ற பட்டத்துடன் ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களின் ஆட்சி பகுதி தாரமங்கலம், ஓமலூர், பவானி,ஆத்தூர், ஆறகழூர் போன்ற பகுதிகள் இருந்துள்ளன.
இவர்களின் கல்வெட்டுக்கள் ஆறகழூர்,ஓமலூர், தாரமங்கலம், பவானி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

புதன், 3 மே, 2017

சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்


சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்



வரும்  2017  மே 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாழப்பாடியில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் வரலாற்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது, இதில் ஆய்வாளர்கள் பல்வேறு தலையில் பேச உள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் குறு நில மன்னர்கள் என்ற தலைப்பில் தொல்லியல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஆய்வாளர் பூங்குன்றன் அய்யா அவர்கள் பேச உள்ளார்..அய்யாவின் கருத்துக்களை குறிப்பெடுக்க பேனா நோட்டு அவசியம் கொண்டு வாங்க...
குறுநில மன்னர்கள் பற்றி நடுகல் கல்வெட்டுக்களும், கோயில் கல்வெட்டுக்களும் நமக்கு தெரிவிக்கின்றன...சேலம் மாவட்டத்தில் 9 ஆம் நூற்றாண்டு முதலே குறு நில மன்னர்கள் பற்றி தகவல்கள் கிடைக்கின்றன.
நம் சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த நீர்முள்ளிகுட்டை நடுகல்லானது ராமாவடிகள் என்ற ஒரு குறுநில மன்னரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த ராமாவடிகள் என்ற மன்னர் தமிழகம்ம் இது வரை அறியாத ஒரு புதிய பெயராகும்.இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை ஆட்சி செய்துள்ளார்.
9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இது. ஆட்சியாண்டு ஏதும் குறிப்பிடப்படாததால் பல்லவர் கீழ் இல்லாமல்
,ராமாவடிகள் சுதந்திரமாய் ஆட்சி செய்த மன்னர் என கருத வாய்ப்புண்டு.

இவரின் மகன் பெயர் பெருமான் ,இவர் பூலாம்பாடியின் மீது படயெடுத்த போது போரில் இறந்த பொன்ன குன்றி என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்