ஆறகலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறகலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜனவரி, 2016

kural-வாணகோவரையரின் கோயில் கலைப்பாணி மகதை மண்டலம்

வி.கூட்டுரோடு- வேப்பூர் சாலையில் பைக் சீறி பாய்ந்து கொண்டிருந்தது...மனமோ மகதை தேசத்தை பற்றி சிந்தித்து கொண்டிருந்தது..இந்த சாலை வழியாகத்தானே நம் மன்னர் பொன் பரப்பின வாணகோவரையன் எத்தனையோ முறை பயணித்திருப்பார் என்று என்ணியபடியே பயணித்தேன்..நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர்களை கவனித்தபடியே சென்றேன்....
குரால்...............
எங்க ஊரிலிருந்து வெறும் 13 கி.மீ தொலைவுதான்...ஆனா இதுவரை அங்கு போனதில்லை..ஊர் பெயர் பலகையை பார்த்தவுடன் பைக் நான் சொல்லாமலேயே அந்தப்பாதையில் வளைந்தது....
ஒரு சின்ன கிராமம்தான்..இயற்கை எழிலோடும் கொஞ்சும் புன்னகையோடும் என்னை வரவேற்றது....
எதிர்பார்த்தது வீண்போகவில்லை..பழமை மாறாமல் அப்படியே இருந்தது..எங்க ஊர் ராசா பொன்பரப்பின வாணகோவரயன்..மகதை மண்டல ராசா மகதைப்பெருமாள் கட்டிய கோயில் அப்படியே இருந்தது...ஆனால் ரொம்பவும் சிதைந்து போய்....
இதை கட்ட எம்மன்னர் எவ்வளவு உழைத்திருப்பார் எவ்வளவு பணம் செலவாயிருக்கும் எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்..ஆனால் இன்று வணங்குவோரின்றி சீந்துவாரின்றி பாழடைந்து கிடக்கிறது..
கோவில் சிலைகளும் கடவுள் சிற்பங்களும் கூட கொள்வாறின்றி பராமரிப்பின்றி அம்போ என நின்றன....
ஒரே ஒரு சின்ன ஆறுதல் அந்த கோவில் புணரமைப்புக்கும் வரலாற்றை பதியும் முயற்சியையும் அந்த ஊரைச்சார்ந்த தலமை ஆசிரியர் துரைசாமி அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்..அங்குள்ள 4 கல்வெட்டுக்களும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு சிறு நூலாக வரலாற்று மலராக ..போடப்பட்டுள்ளது...
கோவிலின் பெயர் திரு புவனேசுவரன் கோயில்
பாதி கற்றளியாகவும் பாதி செங்கல் தளியாகவும் உள்ளது..
இந்த கோயிலில் சிவலிங்கம்,காலபைரவர்,யக்ரீவர்,,லட்சுமி,சரஸ்வதி,சண்டிகேசுவரர்,மகாகணபதி,முருகன்,திரிபுவனேசுவரியம்மன்,தட்சிணாமூர்த்தி,வக்கரகாளியம்மன்(நிசும்பசூதனி..?),விஷ்ணுதுர்க்கை போன்ற சிலைகளும் உள்ளன..
இங்கு வாணகோவரையர் கல்வெட்டு மட்டுமே காணப்படுகிறது அதற்க்கு பின் வந்த பாண்டியர்,விஜயநகர பேரரசு,நாயக்கர்கால கல்வெட்டுக்கள் ஏதும் காணப்படவில்லை..
மூன்றாம் குலோத்துங்கன்,மூன்றாம் ராசராசன் பெயர்கள் கல்வெட்டில் வருவதால் அப்போது அவர்கள் கீழ் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகளூரை கொண்டு ஆண்ட பொன்பரப்பின வாணகோவரையன் கட்டிய கோயில் இது என்று உறுதியாகிறது
வாணகோவரையனுக்கு பின் கட்டுமானமும் பராமரிப்பும் நடைபெறாததால் இது ஒரிஜினல் கலப்பில்லா வாணகோவரையரின் முத்திரை...இங்கு பொன் பரப்பின வாணகோவரையனின் சிற்பமும் ஓரிடத்தில் காணப்படுகிறது..
காக்க வேண்டிய பொக்கிசம் இது..



























புதன், 19 ஆகஸ்ட், 2015

ஆறகளூர் பள்ளியில் விபத்து


ஆறகழூர் அரசு ஆரம்ப துவக்கப்பள்ளிக்குள் கார் கட்டுப்பாட்டை இழந்து நுழைந்தது மாணவ மாணவிகள் காயம்







அழியும் வரலாறு

என்னத்த சொல்ல மக்களின் மூட நம்பிக்கைக்கு அளவே இல்லாம போச்சு......

------------------------------------------------------------------
வழக்கம் போல் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம்..அன்ணே உங்க ஏரியாவில் ஏதாவது கல்வெட்டு பழைய சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்...
அவர் காடு,இருப்பிடம் எங்க ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் புளியங்குறிச்சி தாண்டி அய்யனார் பாளையம் பாரஸ்டுக்கு பக்கமா இருக்கு.....
அவர் எனக்கு நல்ல பழக்கம்...கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னார்....நீ கேட்பதால் இதை சொல்லுறேன்...வேறு யார் கேட்டிருந்தாலும் இதை சொல்லியிருக்க மாட்டேன் என சொல்ல துவங்கினார்...
ஒரு 40 வருசத்துக்கு முன்னாடி எங்க காட்டு பக்கம் ஒரு 6 சிலைக்கு பக்கமா காட்டுக்குள் இருந்திச்சி...அப்ப ஒரு சமயம் மழை இல்லாமா ரொம்ப வறட்சியா இருந்திச்சி....அப்ப சிலர் ..இந்த சிலை காட்டுக்குள் இருப்பதால்தான் மழை பெய்யலன்னு சொல்லிட்டு இருந்தாங்க....
இதை மூக்கறு சிலைன்னும் சொன்னாங்க...
ஒரு கட்டத்தில் மழை இல்லாமல் ரொம்ப வறட்சி வந்தபோது நாங்க அந்த சிலையை புடுங்கி ஒரு சாக்கில் வைத்து கட்டி...சின்னசேலம் போய்..அங்கு வந்த ரயிலிலில் உள்ள பெட்டியில் அந்த சிலைகளை போட்டுவிட்டு வந்திட்டோம் என சொன்னார்.......
என்னத்த சொல்ல எப்படி எப்படியோ அழியுது நம்ம வரலாறு.. frown உணர்ச்சிலை
— பிரிந்ததுபோல உணர்கிறார்.

ஆறகளூர் மகதை தேசத்து சதி கல்










---------------------------------------------------------

இன்னிக்கி வாழ்கையில் ரொம்ப மகிழ்சியான நாள்..கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம் உங்க வீட்டு பக்கம் ஏதாவது பழைய கல்லில் எழுத்து அல்லது சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்..கொஞ்சம் யோசித்து விட்டு எங்க காட்டுக்கு பக்கத்தில் ஒரு குச்சிகாட்டுக்குள் ஒரு சிலை இருக்குன்னு சொன்னார்..இன்னிக்கி காலையில் எழுந்தவுடன் முதல் வேலையா அந்த காட்டை நோக்கி ஓடினேன்..அரைமணி நேர தேடலுக்கு பின் அந்த இடத்தை கண்டுபிடித்தேன்...வசிஷ்டநதியின் ஓரத்தில் ஒரு கிழங்கு குச்சி காட்டின் நடுவே கணவனும் மனைவியும் த
ம்பதி சமயதராய் என்னை பாத்து சிரித்தார்கள்.ஏண்டா பேராண்டி எங்களை பாக்க வர உனக்கு இவ்வளோ வருசமாச்சா..? நம்ம மகதை தேசத்துக்கு நான் செய்த பணியை சொல்லுடா என சொல்லாமல் சொன்னார்...என் புருசன் போன பின்னடி நான் வாழ்ந்து என்ன சாதிக்க போறன்னு அவரோடையே போயிடலான்னு அவர் கூடவே போயிட்டேன் என்று சொன்ன மாதிரி தோணுச்சி..
ஆடை அணிகலன்களை பாக்கும் போது உயர்ந்த பொறுப்பில் இருந்த போர்படை தளபதி ,செல்வந்தர் மாதிரி தோணுது....
இது நடுகல்லா அல்லது சதி கல்லா????

இது சதிகல்தான் என உறுதிபடுகிறது..

புதன், 1 ஏப்ரல், 2015

aragalur-ஆடல் பாடல் நிகழ்சி-ஆறகழூர்



சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் நடந்த அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சியின் காணொளி காட்சி

புதன், 18 மார்ச், 2015

ஆறகழூர் பருவதராஜ குலத்தின் சார்பாக அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் கும்பாவிசேகம்

ஆறகழூர் பருவதராஜ குலத்தின் சார்பாக அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் கும்பாவிசேகம் 30-03-2015 அன்று நடக்க உள்ளது...வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்க

வெள்ளி, 16 ஜனவரி, 2015

aragalur-ஆறகழூர் பொங்கல் விழா கைப்பந்து போட்டிகள் காணொளி 3

aragalur-ஆறகழூர் பொங்கல் விழா கைப்பந்து போட்டிகள் காணொளி 2

aragalur-ஆறகழூர் பொங்கல் விழா கைப்பந்து போட்டிகள் காணொளி1

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

aragalur-மலரும் நினைவுகள்

ஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி ஹோட்டல் சண்முகம் மறைந்தார்




ஆறகழூர் பஸ்நிலையத்தில் ஸ்டேசனரி ஸ்டோர் வைத்திருக்கும் அண்ணன் ஹோட்டல் சண்முகம் அவர்கள் இன்று அரைமணி நேரம் முன்பு இயற்கை எய்தினார்..இவருக்கு வயது 75...
இவருக்கு அருள்(அரசு போக்குவரத்து ஓட்டுனர்)
குமரன் ஆசிரியறென்ற மகன்களும் ஜோதி என்ற பெண்ணும் உண்டு..இவரின் பேரன் முக நூலில் உள்ளார்...அன்னாரின் மறைவுக்கு ஆறகழூர் பொது மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்...