நடுகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜனவரி, 2021

உலிபுரம் கல்வெட்டும், நவகண்ட சிற்பமும்

 உலிபுரம் கல்வெட்டும் நவகண்ட சிற்பமும்
   


 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மனைவிக்கு தேர்தல் பணி உலிபுரம் என்ற ஊரில் அளிக்கப்பட்டது.அதற்க்கு முன் உலிபுரம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அந்த ஊருக்கு போனதில்லை. தேர்தலுக்கு முதல் நாள் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றேன். மனைவி தேர்தல் பணியை கவனிக்க, நான் உள்ளூர் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் மனைவி ஒருவரிடம் நான் வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதை பற்றி சொல்லி விட்டு உங்க ஊரில் ஏதாவது கல்வெட்டு இருக்கா என கேட்டார்.

      



   எங்க ஊரில் ஒரு சிவன் கோயில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனா இப்ப இல்லை மேடம். ஆனா அங்க எழுத்து இருக்கிற மாதிரி ஒரு கல்லை பாத்த நினைவு இருக்கு.

  என் மனைவி என்னிடம் சொல்ல , இரவு 7 மணி ஆயிடுச்சே, சரி இருட்டாக இருந்தாலும் பரவாயில்லை என அவருடன் கிளம்பினேன். ஊருக்கு வெளியே 2 கி.மீ தொலைவில் ஸ்வேதா நதியின் தென்கரையில் இருந்த அந்த சிவன் கோயிலை சென்றடைந்தோம். கோயில் முற்றிலும் அழிந்து போய்விட்டது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மாதவன் என்பவர் முன்னெடுத்து புதிதாக கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

    



  அந்த கோயிலின் முன்பாக நடப்பட்டிருந்த ஒரு பலகைகல்லில் ஒரு கல்வெட்டும், லிங்கமும்,சில உதிரி சிற்பங்களும் மட்டுமே அங்கு ஏற்கனவே ஒரு கோயில் இருந்ததற்கு சான்றாக நின்றிருந்தது.


    



இரவு ஒன்பது மணிக்கு கிளம்பி பள்ளிக்கு சென்று உறங்கினேன். ஒரு வாரம் கழித்து விழுப்புரம் வீரராகவன் ஐயாவுக்கு தகவல் சொல்லி ,இருவரும் உலிபுரம் சென்று அந்த கல்வெட்டை படி எடுத்து படித்தோம்.

       



   அப்போது கொரானா வந்ததால் இந்த செய்தியை வெளியிட முடியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தது. ஒருநாள் உலிபுரம் மாதவன் அவர்களிடம் இருந்து ஒரு போன்..

      



   சார் நம்ம கோயிலுக்கு முன்னாடி இருந்த ஒரு வயலில் இருந்த புதரில் 2 சிலை இருக்கு என சொல்லி புகைப்படம் அனுப்பினார்.அதை பார்த்ததும் நவகண்டம் என புரிந்து கொண்டேன்

   



  அடுத்த நாள் பைக் உலிபுரத்தை நோக்கி பறந்தது. நவகண்ட வீரர்களை படம் எடுத்து கொண்டேன்.

   



  பின் வந்த நாளிதழ், தொலைக்காட்சி செய்தி உங்களுக்காக
     

வணக்கம் நண்பர்களே. இந்த ஆண்டு 2021 . முதல் கண்டறிதல் இது.
*சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த உலிபுரம் கல்வெட்டுகள், நவகண்டம் பற்றிய செய்தி இன்றைய காலைக்கதிர் நாளிதழ், தினமணி , தினமலர் இணைய தளம், ஜெயா பிளஸ் தொலைக்காட்சி, மாலை மலர் நாளிதழ், மாலை முரசு,நக்கீரன்,சன் செய்தி ஆகியவற்றில் வெளிவந்துள்ளது.செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தமிழ்செல்வன், திரு சரவணன், திரு ஆரோக்கியராஜ், திரு சிற்றரசு , திரு
கவிஞர்.பெ.பெரியார் மன்னன்
ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது*
ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752

உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டும் நவகண்ட சிற்பங்களும் கண்டெடுப்பு

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் மாதவன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் உலிபுரம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோயில் இருந்து தற்போது அழிந்து விட்டது. அதை புதிதாக கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கல்வெட்டு

இக்கோயிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றது.இதில் ஒன்று முழுமையான கல்வெட்டு, மற்றொன்று துண்டு கல்வெட்டு ஆகும். இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

துண்டு கல்வெட்டு

இக்கோயிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன்,பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என கல்வெட்டு துவங்குகிறது. இதன் மறுபுறத்தில் 13 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இங்கிருந்த கோயிலை அம்பலத்தாடி நாயனார் கோயில் என குறிக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில் ஆறகளூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. அப்போது மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கர் என்பவர் இருந்துள்ளார். இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையார் என்பவர் இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் ஒன்றை அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிர்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரண்டாவது கல்வெட்டு

கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊர் அப்போது புலியுரம்பூர் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அச்சுததேவ மகராயர் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூர் கூற்றத்தில் புலியுரம்பூர் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கர் என்பவர் அப்போது பாளையக்காரராக இருந்துள்ளார். அவர் திரு அம்பலமுடைய தம்பிரான் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வார் பிள்ளை என்பவருக்கு தன்மமாக செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளார். இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லை கற்கள் நடப்பட்டன. அந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும்,திருப்பணிக்கும் செலவிடப்படவேண்டும். இந்த தானத்தை போற்றி அழியாமல் காப்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவை தானமாக கொடுத்த புண்ணியத்தை பெறுவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவை, கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊர்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகிறது.

நவகண்டம்

நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னயே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கமாகும். போர் நடக்கும் முன் கொற்றவை கோயிலுக்கு வீரர்கள் சென்று பூசை செய்வர். அப்போது நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரர் தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறிந்து கொற்றவையின் முன் வைப்பர், ஒன்பதாவதாக தன் தலையை தானே அரிந்து சுயபலி கொடுத்துக்கொள்வர். இப்படி பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே நவகண்டம் எனப்படும்.இந்த வீரர்களுக்கு உதிரப்பட்டியாக வீடும், நிலமும் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

உலிபுரம் நவகண்ட நடுகல்

உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோயில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக கருதலாம். ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரர்களாக இவர்கள் இருக்கலாம். பல்லவர்கள் ,சோழர்கள் காலத்தில் நடுகல்லில் அந்த வீரனின் பெயர்,ஊர்,எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகல்லிலும் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.

3 அடி உயரம், நேரான கொண்டை,கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகமானது சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. காதணிகள், கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகிறது. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராக காட்டப்பட்டுள்ளது. ஒரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும்.இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது. அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பத்திரிக்கை செய்திகளும் இணைய இணைப்புகளும்

காலைக்கதிர்

                              தினமணி
                



                                டைம்ஸ் ஆப் இந்தியா

                                      மாலைமலர்

                                மாலைமுரசு
                                
   இணைய தள இணைப்புகள்

    etc பாரத் சேனல்

     https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/tamil-nadu20210110110935930

டைம்ஸ் ஆப் இந்தியா

             https://timesofindia.indiatimes.com/city/chennai/two-16th-century-hero-stones-found-at-tamil-nadus-ulipuram/articleshow/80126521.cms?fbclid=IwAR2Bk2gHcpZ4oTn_Nl6jJV33POzemSvt2zk7CzierYO3DLanDicXcWYbah4


தினமணி

https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2021/jan/02/discovery-of-2-inscriptions-and-2-navakanda-sculptures-dating-back-to-489-years-at-ulipuram-3536131.html?fbclid=IwAR1xMeb1YQKpRtSpfe49n9jd9p8VXRupIgs_n04p28psO_VyMePP_fQlxZU


தினமலர்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2682147&fbclid=IwAR1bn1Le3mEHuutWjOGXCM3B-7roelr_wzig-UmsoXBREsTwz4uz8_6Qy1Y

நக்கீரன்

https://nakkheeran.in/special-articles/special-article/discovery-489-year-old-inscriptions-and-navakanda-sculptures?fbclid=IwAR1YiCoSCUJ-SPsvjhgusVB4tqHig649tKauApZ6l_EwaHHypgzjWtmEOPo


ஜெயாபிளஸ் தொலைக்காட்சி

https://www.youtube.com/watch?reload=9&v=JitpqNfb-eo&feature=share&fbclid=IwAR2SGT9jSaRtmxGPFDlSFYSlbVLbjhXF4-a6su8lTW7o3fTZ3sK_VKWfLFE

news next இணையதளம்
https://tamil.newsnext.live/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/





வெள்ளி, 14 டிசம்பர், 2018

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- சேலம் ஆன்லைன் செய்தி

தேவியாக்குறிச்சி நடுகற்கள் சேலம் ஆன்லைன் செய்தி
Salem:
December 3
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார்,மற்றும் மாணவ மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரு நடுகற்களும் அருகருகே காணப்படுகின்றன.
இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது.கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி,கழுத்தில் சரபளி,சவடி,போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்ன வீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் நான்கு அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பு உள்ளது. இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது.
இது இந்தப்பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட வீரக்கல்லாகும். 12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியர் குறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின் போது ஹெய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர். அந்த போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என கருதலாம். இந்த வீரனின் வலது புறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது 76 செ.மீ உயரமும், 58 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
இது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. நேரான கொண்டை, கழுத்தில் சவடி,சரபளி, காதுகளில் அணிகலன்கள் ,மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறது. இடது கையில் நீண்ட வில்,வலது கையில் அம்பு,முதுகில் உள்ள அம்புக்கூட்டில் நான்கு அம்புடன் காட்டப்பட்டுள்ளது. அரையாடை, ஆடை முடிச்சு உள்ளது. இடுப்புக்கு கீழ் முழங்கால் வரை வலது கால் மேற்புறம் சிதைந்துள்ளது. இடது பாதமானது இடப்பக்கம் திரும்பி போருக்கு செல்லும் நிலையில் உள்ளது. மகதை நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும்.
இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

நடுகல் இறந்தவர்களின் நினைவாக நடப்படும் கற்கள் நினைவுக் கற்கள் எனப்படுகின்றன. இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். இறந்தவர் அனைவருக்கும் நடுகற்கள் நடப்படலாம் என்றாலும், போரில் வீரமரணம் அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்கள் நினைவாக அமைக்கப்படும் நடுகற்களை பண்டைக்கால மக்கள் வணங்கி வந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இந்தவகையான நடுகற்கள் இரண்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளன. ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார்,மற்றும் மாணவ மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன. அருகருகே காணப்படும் இந்த இரு நடுகற்களில் இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது. கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி,கழுத்தில் சரபளி,சவடி,போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது.
சன்ன வீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் நான்கு அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பு உள்ளது. இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. இது இந்தப்பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட வீரக்கல்லாகும்.
12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியர் குறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின் போது ஹொய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர். அந்த போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என கருதலாம்.
இந்த வீரனின் வலது புறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது 76 செ.மீ உயரமும், 58 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது.
நேரான கொண்டை, கழுத்தில் சவடி,சரபளி, காதுகளில் அணிகலன்கள் ,மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறது. இடது கையில் நீண்ட வில்,வலது கையில் அம்பு,முதுகில் உள்ள அம்புக்கூட்டில் நான்கு அம்புடன் காட்டப்பட்டுள்ளது. அரையாடை, ஆடை முடிச்சு உள்ளது. இடுப்புக்கு கீழ் முழங்கால் வரை வலது கால் மேற்புறம் சிதைந்துள்ளது. இடது பாதமானது இடப்பக்கம் திரும்பி போருக்கு செல்லும் நிலையில் உள்ளது.
மகதை நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
தகவல்: ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A.(PU.AD),M.A.(J.M.C),M.PHIL,D.PHARM



தலைவர், சேலம் வரலாற்று ஆய்வுமையம்

http://www.nntweb.com/news-view.php?nid=484&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....

வெள்ளி, 5 ஜனவரி, 2018

புத்தூர் நடுகல்

தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 2 நடுகற்கள் பற்றிய செய்தி இன்றைய 3/01/2018 காலைக்கதிர், தினமணி,தினத்தந்தி,தினகரன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன்,திரு தினமணி சரவணன்,திரு தினத்தந்தி வேலுமணி, திரு தினகரன் சேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
காலைக்கதிர் செய்தி

தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே புத்தூர் என்ற கிராமத்தில் 2 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தினத்தந்தி
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது புத்தூர் அரசுப்பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன
இந்தியன் எக்ஸ்பிரஸ்
.
நடுகல்
ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி , பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும்போது இறந்தவர்கள், தன் நாடு போரில் வெற்றி பெற கொற்றவையின் முன் தன் உயிரை தானே பலி கொடுத்து கொண்டவர்கள், மக்கள் நலனுக்காக உயிரிழந்தவர்கள் இவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது.
தினமணி
புத்தூரில் காணப்படும் நடுகற்கள் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். இவை 40 செ.மீ உயரம் 35 செ.மீ அகலம் உடையதாக உள்ளது. இதில் ஒரு நடுகல் தலை இல்லாமல் உள்ளது. இதை தலைவெட்டி சாமி என ஊர் மக்கள் அழைக்கிறார்கள். முதல் நடுகல்லானது பின்னோக்கிய இடது பக்க கொண்டையுடனும் ,இடது கையில் வில் பற்றி வலது கையில் நாணில் அம்பை பூட்டி தொடுக்கும் நிலையில் உள்ளது. முதுகு பக்கம் அம்புக்கூடு ,இடையில் அரையாடை இடுப்பில் குறுவாளுடன் இடது பக்கம் எதிரியை தாக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டாகலாம்.
18ஆம் நூற்றாண்டு நடுகல் வீரன்

இரண்டாவது நடுகல்லானது தலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது . கழுத்தில் சரபளியும் சவடியும் காட்டப்பட்டுள்ளது .மார்பில் சன்னவீரம் வலது கையில் கத்தி , இடது கையில் வில் ஏந்தியும், வயிற்றுக்கட்டும் (உதிரபந்தம்) காட்டப்பட்டுள்ளது. வயிற்று கட்டின் சுங்கு முடிச்சு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை அரையாடையும் , வலதுகால் நேராகவும் இடது கால் இடப்பக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது.
17ஆம் நூற்றாண்டு நடுகல்
சன்ன வீரம்
இந்த நடுகல்லில் காணப்படும் சன்னவீரம் முக்கியமான ஒன்றாகும் .சன்னவீரத்துடன் காணப்படும் நடுகற்கள் அரிதாகவே உள்ளது. சன்னவீரம் போர்கடவுளான முருகன் அணிவதாகும். இது வீரத்தின் சின்னம் ,வீரச்சங்கிலியில் அமையும் ஓர் உறுப்பாகும். கழுத்தினை சுற்றியும் மார்பணிகளை சுற்றியும் ஒரு மூலையிலிருந்து எதிர்மூலைக்கு குறுக்கே சென்று முதுகிலும் அப்படியே அமைந்த இரு சங்கிலிகள் சன்ன வீரம் எனப்படும். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று தரவுகள் கிடைக்கலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினார்கள்.
ஆறகழூர் பொன்.வெங்கடேசன், வீரராகவன் ஐயா
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்

சனி, 5 ஆகஸ்ட், 2017

ஏற்காடு மாரமங்கலம் பன்றிகுத்திபட்டான் நடுகல் புதிய கற்காலகருவிகள்










ஏற்காடு மாரமங்கலம் காட்டுபன்றி குத்திபட்டான் நடுகல் புதிய கற்கால கருவிகள்



கடந்த சனிக்கிழமை அன்று 29 ஜூலை அன்று கலைச்செல்வன் ஆசிரியர் மற்றும் பெருமாள் ஆசிரியர் இருவரும் ஏற்காடு பகுதியில் தேடலை மேற்கொண்டனர் .மோசமான சாலையிலும் கடுமையாக முயற்சித்து கல்வெட்டுக்களையும் ,ஒரு பன்றிகுத்தி பட்டான் நடுகல்லையும் கண்டறிந்தனர். அடுத்த நாள் ஞாயிற்று கிழமை நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவானது விழுப்புரம் வீரராகவன் அய்யாவை அழைத்துக்கொண்டு ஏற்காடு கிளம்பியது.
80% நல்ல சாலை 20% செங்குத்தான மிகச்சரிவான மண்சாலையில் பயணித்தோம். 13 ஆம் நூற்றாண்டு கோயிலில் 4 கல்வெட்டுக்கள் படி எடுத்தோம். கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றி குத்தி பட்டான் கல்லில் உள்ள எழுத்துக்களையும் படித்தறிந்தோம்.
Kalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPonnambalam ChidambaramJeevanarayanan SelvakumarPeriyar MannanOotykrishna
ஆகிய சேலம் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
காட்டுப்பன்றி குத்தி பட்டான் கல், மற்றும் புதிய கற்கால கருவிகள் பற்றிய செய்தி இன்றைய தினமணி, காலைக்கதிர்,தினகரன் செய்திதாட்களில் செய்தி வந்துள்ளது .செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன், தினமணி திரு பெரியார் மன்னன், தினகரன் திரு சேகர் அவர்களுக்கும் சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் ,முகநூல்,வாட்சப்பில் உள்ள சான்றோர்களும் கொடுக்கும் உற்சாகமும் ஆதரவுமே ,கருத்துரைகளுமே எங்களை உத்வேகப்படுத்தி மேலும் தேடலை ஆர்வமுடன் செய்ய தூண்டுகிறது.உங்கள் அனைவருக்கும் நன்றி.
பத்திரிக்கை செய்தி:
ஏற்காடு அருகே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவிகள் மற்றும் ,கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றிகுத்தி பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம், கேளையூர் என்ற மலை கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும் நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ,கலைச்செல்வன்,சீனிவாசன்,பொன்னம்பலம்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு ஏற்காடு அருகே சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மாரமங்கலம், வடக்கு மலையான் ,கேளையூர் போன்ற மலைகிராமங்களில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டது. அப்போது வடக்குமலையான் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும்.கேளையூர் கிராமம் பிள்ளையார் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும்,மாரமங்கலம் கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றிகுத்தி பட்டான் நடுகல்லும் கண்டறியப்பட்டது.
புதிய கற்கால கருவிகள்
புதிய கற்கால கருவிகள் 6 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தவை. புதிய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கரடுமுரடான கற்கருவிகளை செதுக்கியதோடு மட்டுமல்லாது அவற்றை தேவைக்கு ஏற்ப தேய்த்து வழவழப்பாக செய்து கொண்டான். கற்கோடாரிகளும், செதுக்கும் கருவிகளும் நல்ல தோற்றம் உடையவையாகவும் வழவழப்பாகவும் செய்யப்பட்டதுடன் குத்தும் முனையும் கூர்மையாக்கப்பட்டது. கீழ் பகுதி கையில் பிடிக்க ஏதுவாகவும் வெட்டும் முனைகளாகவும் செய்யப்பட்டது. பல்லாயிரம் வருடங்களாக கற்கருவிகள் செய்ய தேர்ச்சி பெற்றதால் புதிய கற்காலத்தில் சிறந்த கருவிகள் செய்ய மனிதன் பழகி கொண்டான். சிறிய உருண்டை வடிவ கற்கள் விலங்குகளை தொலைவில் இருந்து தாக்கவும் கொட்டைகளை உடைக்கவும் பயன்பட்டுள்ளன. பெரிய உருண்டை வடிவ கற்கருவிகள் ஆயுதங்களை வழவழப்பாக்கவும் கூர் தீட்டவும் பயன்பட்டுள்ளன. .பழைய கற்கால கருவிகளை விட புதிய கற்கால கருவிகள் அதிகம் கிடைப்பதால் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதனின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உணரலாம். புதிய கற்கால மனிதன் வாழ்ந்த காலகட்டத்தில் உணவுப்பயிர்களையும் பயிரிடும் முறையையும் அறிய துவங்கியுள்ளான். ஆடு, மாடுகளை வீட்டு விலங்காக பழக்கியும் பயன் பெற்றதோடு நிரந்தரமாக இருப்பிடங்களையும் அமைத்துக்கொண்டு கிராம வாழ்கைக்கும் அடி கோலியுள்ளான்.இந்த கிராமங்களில் உள்ள இந்த புதிய கற்கால கருவிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள ஓடைகளிலும், விளை நிலங்களில் உழவு ஓட்டும்போதும் கண்டெடுக்கப்பட்டு இப்போது தெய்வமாக இந்த மக்களால் வழிபாடு செய்யப்படுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
காட்டுபன்றிகுத்திபட்டான் நடுகல்
மாரமங்கலம் கிராமத்தில் வாணிக்கொம்பை என்ற இடத்தில் கந்தன் என்பவரின் தோட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டது.
ஒரு வீரன் நீண்ட ஈட்டியால் ஒரு காட்டுப்பன்றியை குத்தி கொல்வதை போல் சிற்பம் உள்ளது. வீரனின் கொண்டை வலது புறம் சாய்ந்துள்ளது. காதுகளில் பாடகம் என்ற காதணி உள்ளது.மீசை மேல்நோக்கி முறுக்கியபடி காட்டப்பட்டுள்ளது.இடையில் அழகிய முடிச்சுடன் கூடிய இடையாடையும் குறு வாளும் உள்ளது. வீரன் கையில் உள்ள ஈட்டி பெரியதாகவும் கூர்மையாகவும் உள்ளது.இடது காலில் வீரக்கழல் உள்ளது.வலிமையோடு வீரன் குத்திய ஈட்டி காட்டுப்பன்றியின் உச்சந்தலையில் குத்தி கழுத்துக்கு கீழே இறங்கியுள்ளது.வீரனின் வலது பக்கம் துப்பாக்கி ஒன்று காட்டப்பட்டுள்ளது.இந்த வீரனின் வேட்டை நாய் இரண்டும் நடுகல்லில் உள்ளது. ஒரு நாயானது காட்டுப்பன்றியின் மேல் ஏறி நின்று அதன் காதை கடித்து குதறுகிறது. மற்றொரு நாய் பன்றியின் பின் காலை கடித்து தாக்கி வீரனுக்கு வேட்டையில் உதவியதை காட்டும்படி நடுகல் சிற்பம் உள்ளது.
அப்போது விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழித்த காட்டுப்பன்றியை வேட்டையாட தன் இரு வேட்டை நாயுடன் இந்த வீரன் சென்றுள்ளான். அப்போது நடந்த சண்டையில் அந்த காட்டுப்பன்றியை கொன்று வீரனும் இரு நாய்களும் இறந்து போய் உள்ளனனர். அந்த வீரனுக்காலவும் வேட்டை நாய்களுக்காகவும் எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
கல்வெட்டு செய்தி
இந்த நடுகல்லில் 19 வரிகளுடன் கல்வெட்டு செய்தி உள்ளது.
மாரமங்கலம் அண்ணாமலைக்கவுண்டர் என்பவர் இந்த நடுகல்லை செய்து வைத்துள்ளார். வாணிக்கொம்பை என்ற இடத்தில் உள்ள விளைநிலங்களில் பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து நாசம் செய்து வந்துள்ளன. காத்தா கவுண்டன் என்பவரின் மகன் நக்க கவுண்டன் என்பவர் அந்த காட்டுப்பன்றியை கொன்று தானும் இறந்துள்ளார். இவருக்கு வைக்கப்பட்ட வீரக்கல் இதுவாகும்.
இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினார்கள்.
#சேலம்வரலாற்றுஆய்வுமையம்
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்

http://timesofindia.indiatimes.com/city/salem/prehistoric-stone-weapons-discovered-near-yercaud/articleshow/59922264.cms

http://www.dinamani.com/tamilnadu/2017/aug/04/6000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2749288.html
http://www.dinamalar.com/news_detail.asp?id=1826483

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=748907




வெள்ளி, 21 ஜூலை, 2017

சேலம் வாழப்பாடி பெரியகுட்டி மடுவு நடுகற்கள்

பெரியகுட்டி மடுவு -11ஆம் நூற்றாண்டு சோழர்கால நடுகல் செய்தி.

சுமார் 3 மாதங்களுக்கு முன் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பெருமாள் சார் புழுதிக்குட்டை பகுதிக்கு ஆய்வு செய்யலாம் என அழைத்தார். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவன் அய்யா,ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவன முருகன் சார்
பெருமாள் சார், கலைச்செல்வன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம்,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார் மன்னன், தீபக் ஆதி, வீரமணி வீராசாமி அய்யா ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டை பகுதியில் இரண்டு நடுகற்களை ஆய்வு செய்து படி எடுத்தோம்..
மேற்கொண்டு தேடலை தொடர கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் இங்கு நடுகல் இருக்கா, கல்வெட்டு இருக்கா என விசாரித்துக்கொண்டே மலை மேல் பைக்கில் ஏறுக்கொண்டே இருந்தோம். நீண்ட விசாரிப்பகளுக்கு பின் பெரிய குட்டி மடுவு என்ற இடத்தில் 2 கல்லு ரொம்ப நாளா நின்னுகிட்டு இருக்கு என தகவல் சொன்னார்..உற்சாகம் பீறிட அந்த இடத்தை நோக்கி எங்களின் பைக் சீறி பாய்ந்து சென்றது..
கிட்ட தட்ட அந்தி சாயும் நேரம் .சூரியன் மெல்ல மறைய துவங்கியிருந்தான் .இருட்டுவதற்க்குள் போகவேண்டுமே என பரபரப்புடன் பயணித்தோம்...அந்த இடத்துக்கு சென்று அங்கும் பலருடன் விசாரித்து ஒரு வழியாய் இடம் இருக்கும் தெரிந்தது. சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தோம்...வழியில் ஒரு ஓடை அதையும் கடந்து சரிவான பாதையின் மேல் ஏறி சென்றோம்..மூச்சு வாங்கியது....தூரத்தில் 2 நடுகற்கள் தெரிந்தது. களைப்பெல்லாம் பறந்தது. பறந்தோடினோம்...
அங்கு தன் உடலில் 5 அம்புகளை வாங்கிய வீரனும், அருகே மற்றொரு வீரனின் நடுகல்லும் இருந்தது..பரபரவென இயங்கினோம்..மைப்படி எடுத்தோம்..எழுத்துக்கள் மிகுந்து தேய்ந்தும் சிதிலமடைந்தும் இருந்ததாலும் ,இரவாகிவிட்டதாலும் திரும்பி விட்டோம்...பின்னர் 3 மாதங்கள் முயற்சித்தும் எழுத்துக்கள் மோசமாக இருந்ததால் திரும்ப சென்று படிக்கலாம் என முடிவு செய்தோம்
இம்முறை தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன் அய்யா , ஆய்வாளர்கள் மங்கயற்கரசி மேடம், கோவை சுந்தரம் அய்யா ஆகியோர் இணைந்தனர்...அப்போது படித்து அறியப்பட்ட செய்தி இன்றைய
காலைக்கதிர், தினமணி, தினத்தந்தி, தினமலர், நேற்றைய மாலைமுரசு, மாலை மலர் ஆகிய நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும், செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன் சார், தினமணி, மாலைமலர் பெரியார் மன்னன் சார், தினத்தந்தி வேலுமணி சார், தினமலர் ஆத்தூர் கிருஷ்ணன் சார் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

நடுகல் செய்தி:

900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு சோழர்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் புழுதிக்குட்டை ஊராட்சியில் கல்வராயன் மலையில் உள்ள பெரியகுட்டி மடுவு என்ற கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த தமிழக தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் பூங்குன்றன், வரலாற்று ஆய்வாளர்கள் , விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள், மருத்துவர் பொன்னம்பலம் , மங்கையற்கரசி,கோவை சுந்தரம், கலைச்செல்வன் சுகவனமுருகன், ,சீனிவாசன், ஜீவநாராயணன், பெரியார்மன்னன் ஆகியோர் அடங்கிய குழு பெரியகுட்டிமடுவு பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஏரிக்காடு பகுதியில் பொன்னுசாமி என்பவரின் நிலத்தில் 11ஆம் நூற்றாண்டு மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு சோழர்கால நடுகற்கள் கண்டறியப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லில் எழுத்துக்கள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லில் 
எழுத்துக்கள் காணப்படவில்லை.

11ஆம் நூற்றாண்டு நடுகல்

இந்த நடுகல்லானது 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ளது. திரிபங்க நிலையில் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. தலை கொண்டை நேராக உள்ளது. இவன் உடலில் கழுத்து ,மார்பு, வயிறு, தொடை, கணுக்காலுக்கு சற்று மேலே என் 5 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளதை துல்லியமாக சிற்பத்தில் காட்டியுள்ளனர். இவன் வீரம் மிக்கவனாகவும் முக்கிய தளபதியாகவும் இருந்திருக்கலாம். ஒரே நேரத்தில் பலர் இவனை மையப்படுத்தி சூழ்ந்து தாக்கியதால் பல இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. இவன் வலது கையில் வாளும் இடது கையில் வில்லுடன் கூடிய அம்பும் காட்டப்பட்டுள்ளது. அழகான இடை ஆடையும் கழுத்தணியும் காட்டப்பட்டுள்ளது.. இந்த நடுகல்லில் 27 வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. அதில் 3 வரிகள் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளன.

கல்வெட்டு சொல்லும் செய்தி

மலையகுல சந்திராதித்த பேரரையன் என்ற தலைவன் காலத்தில் ஒரு வீரன் தன்னுடைய பகுதியை பாதுகாக்க எதிரிகளுடன் போரிட்டு இறந்த செய்தியை இந்த கல்வெட்டு கூறுகிறது. இதில் வரும் மலையகுலம் என்பது சங்க காலம் முதலே திருக்கோயிலூரை தலைநகராக கொண்டு ஆண்ட மலையமான்களை குறிப்பதாகும். சோழர்கள் காலத்தில் இவர்கள் மலையகுல ராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். இக்கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்ற சொல் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சூரிய குலம், சந்திர குலம் என்ற இரண்டு பிரிவு அரசர்கள் இருந்தார்கள். சில ஊர் கல்வெட்டுக்களில் மட்டுமே இந்த சந்திரகுலம் என்ற பெயர் வருகிறது. இக்கல்வெட்டில் வரும் சந்திராதித்த பேரரையன் என்பது சூரிய குலத்தையும், சந்திர குலத்தையும் இணைத்து ஒரு புதிய குலமாக உருவாகி இருக்கலாம். அதற்கு சான்றான இந்த கல்வெட்டு தமிழக வரலாற்றுக்கு முக்கியமான ஒன்றாகும்.
இந்த கல்வெட்டில் ஈச்சம்பாடி, பரித்தியூர் என்ற ஊர்களின் பெயர்கள் வருகிறது. இந்த ஊர்கள் இப்போதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இதே பெயரில் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. இந்த ஊர்களின் வழியாக மாவூர் என்ற ஊர்வரை சென்று இவர்கள் போரிட்டுள்ளனர். இப்போரில் கணியன் என்பவனின் மகன் சேனான் என்ற வீரன் இறந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்லே இதுவாகும்.
12 ஆம் நூற்றாண்டு நடுகல்
சேனான் என்பவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லுக்கு அருகே மற்றொரு நடுகல்லும் உள்ளது. இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல்லாகும். இதில் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை. வீரனின் தலையின் வலது புறம் கொண்டை காட்டப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாள் உள்ளது. இடது கையில் வில் அம்புடன் இணைந்து உள்ளது. போருக்கு தயாராக செல்லும் நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். காதணிகளும், இடை ஆடையும் காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் ஒர் அம்பு பாய்ந்த நிலையில் உள்ளது. இடுப்பின் ஒருபுறம் குறுவாள் காட்டப்பட்டுள்ளது. சமபங்க நிலையில் வீரன் உள்ளான். இப்பகுதியில் நடந்த போரில் இவன் எதிரிகளை கொன்று இவனும் வீர மரணம் அடைந்துள்ளான். இவனுக்காக வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
இப்பகுதியில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்று செய்திகள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்..
அலைபேசி 9047514844

http://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/vazhappadi+aruke+900+aandukalukku+murbatta+sozharkala+nadukarkal+selam+mavatta+varalarru+aayvu+maiyak+kuzhu+kandarinthathu-newsid-70626486?ss=wsp&s=a
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-900-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2741584.html


http://www.dinamalar.com/district_detail.asp?id=1816881










புதன், 19 ஆகஸ்ட், 2015


ஆறகளூர் மகதை தேசத்து சதி கல்










---------------------------------------------------------

இன்னிக்கி வாழ்கையில் ரொம்ப மகிழ்சியான நாள்..கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம் உங்க வீட்டு பக்கம் ஏதாவது பழைய கல்லில் எழுத்து அல்லது சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்..கொஞ்சம் யோசித்து விட்டு எங்க காட்டுக்கு பக்கத்தில் ஒரு குச்சிகாட்டுக்குள் ஒரு சிலை இருக்குன்னு சொன்னார்..இன்னிக்கி காலையில் எழுந்தவுடன் முதல் வேலையா அந்த காட்டை நோக்கி ஓடினேன்..அரைமணி நேர தேடலுக்கு பின் அந்த இடத்தை கண்டுபிடித்தேன்...வசிஷ்டநதியின் ஓரத்தில் ஒரு கிழங்கு குச்சி காட்டின் நடுவே கணவனும் மனைவியும் த
ம்பதி சமயதராய் என்னை பாத்து சிரித்தார்கள்.ஏண்டா பேராண்டி எங்களை பாக்க வர உனக்கு இவ்வளோ வருசமாச்சா..? நம்ம மகதை தேசத்துக்கு நான் செய்த பணியை சொல்லுடா என சொல்லாமல் சொன்னார்...என் புருசன் போன பின்னடி நான் வாழ்ந்து என்ன சாதிக்க போறன்னு அவரோடையே போயிடலான்னு அவர் கூடவே போயிட்டேன் என்று சொன்ன மாதிரி தோணுச்சி..
ஆடை அணிகலன்களை பாக்கும் போது உயர்ந்த பொறுப்பில் இருந்த போர்படை தளபதி ,செல்வந்தர் மாதிரி தோணுது....
இது நடுகல்லா அல்லது சதி கல்லா????

இது சதிகல்தான் என உறுதிபடுகிறது..