வியாழன், 21 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 5


நத்தகரை கல்வெட்டு
2 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை தொல்லியல் தேடலுக்கு கிளம்பினேன். ஆறகழூருக்கு பக்கத்தில் நத்தக்கரைன்னு ஒரு ஊர் அந்த ஊருக்கு போனேன். அந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சு...? தெரிஞ்சிக்க அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்..
அய்யா இந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சி..?
அதுவா..ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ராசாங்களுக்குள் பெரிய சண்டை நடந்திச்சி. அப்ப நெறைய பேரு இங்க போரில செத்து போய் ரெத்தம் ஆறா ஓடிச்சாம்.அதனால ரத்தகரைன்னு பேரு வந்துச்சாம். காலபோக்குல ரத்தகரை மருவி நத்தகரைன்னு ஆயிடுச்சி . இந்த சண்டையில கை,காலு போனவங்க, காயம் பட்டவங்களுக்கு மலைக்கு பக்கத்துல நிலம் கொடுத்து அங்கியே தங்க வச்சாங்க. அந்த ஊருதான் இப்ப இருக்குற புத்தூர்.என சொல்லி முடித்தார்.
இன்னொரு பெரியவரிடம் கேட்டேன். அவர்
கள ஆய்வின் போது
அந்த காலத்தில் இது ஆறகழூரின் ஒரு பகுதியாதான் இருந்துச்சி..ஆறகழூர் தலைநகராக இருந்திச்சி..கோட்டைக்குள்ள ராசா மந்திரி அப்புறம் முக்கியமான ஆளுங்க குடியிருப்பாங்க..சாதாரண ஆட்கள் குடியிருக்க நத்தம் அப்படின்னு ஒரு பகுதியை ஒதுவாக்குவாங்க. அப்படி ஆறகழூர் நத்தத்துக்கு கரையா இந்த பகுதி இருந்ததால் நத்தகரைன்னு பேர் வந்துச்சி...
சரிங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..?
பஸ்ஸ்டாண்டு கொடி கம்பத்துகிட்ட ஒரு கல்லு இருக்கு போய் பாருங்க..
பறந்துகிட்டு போய் பாத்தேன்...அச்சச்சோ அங்க இருந்தது ஒரு கோமாரிக்கல்லு..
ஏமாத்ததோடு திரும்பி கொஞ்சதூரம் வந்தேன்.அப்ப என் பள்ளித்தோழன் இப்ப நடுநிலைப்பள்ளி தலமை ஆசிரியர் மனோகரன் நின்னுகிட்டு இருந்தார்..
என்ன வெங்கடேசு இவ்வளவு தூரம். உன்னை பாத்து எவ்ளோ நாளாச்சி..நல்லாருக்கியா..?
நல்லாருக்கேன் மனோகரு. நான் இப்ப கல்வெட்டை தேடிகிட்டு இருக்கேன்
அப்படியா எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு கல்லு இருக்கு வந்து பாரு...
இருவரும் அந்த இடத்துக்கு போனோம். சாய்ந்த நிலையில் செடி கொடிகளுக்கு நடுவே ஒரு கல்வெட்டு..
படி எடுக்கும் பணியில்
கல்வெட்டு மைப்படி
அதன் பிம்பத்தை காமிராவின் கண்களுக்கு சாப்பிட கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா மங்கை மேடத்துக்கு தகவல் தெரிவித்தேன். சில வாரங்களில் அந்த கல்வெட்டு படிக்கப்பட்டு செய்தி நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.2016 ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டது. சிலநாள் முன்பு அந்த கல்வெட்டை பார்க்க சென்றபோது செடி கொடிகளுக்குள் மறைந்து கிடந்தது.
கல்வெட்டு வாசகம்
நத்தக்கரை கிராமபூதான கல்வெட்டு
சி.வீரராகவன்
வீ.மங்கையற்கரசி ராகவன்
விழுப்புரம்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
இடம் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே
நத்தக்கரையில் , ஆசிரியர் மனோகரன் என்பவர் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்தில் உள்ள பலகை கல்வெட்டு
காலம் : 16 ஆம் நூற்றாண்டு பொ.ஆ .1585
செய்தி :
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.கல்வெட்டின் இருபுறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
திருவானைக்கா ஸ்ரீ மது ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்திரசேகர உடையார் அய்யன் அவர்களுக்கு மகதை மண்டலம் மலாடாகிய சனநாத வளநாட்டு நிவா(வஷிஷ்ட) நதிக்கு தென்கரை ஆற்றூர் கூற்றத்து ஆத்தூர் நாட்டை சேர்ந்த நாட்டவர்களுக்கு கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யனின் நினைவாக ஆறகளூர் திருகாமீசுரமுடைய பெரியம்மைக்கு தானபூர்வமாக நத்தகரை கிராமத்தை தாரை வார்த்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது..
கல்வெட்டு பாடம் :
1.ஸ்பமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகா
2.ப்தம் 1507 இதன்மேல் செ
3.ல்லா நின்ற பார்திப ஸம்பத
4.ஸரத் மீள ஞாயிற்று அமர ப
5.ட்சத்து ஷஷ்டியும் சோம வார
6.மும் பெற்ற அநுஷ நட்ஷிரத்து
7.நாள் திருவாணைக்கா ஸ்ரீ மது
8.ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்
9.திர சேகர உடையார் அய்யன் அவ
10.ர்களுக்கு மகதை மண்டலம் மலா
11.டாகிய ஜனநாத வளநாட்டு ஆ
12.--- தென்கரை ஆற்றூர் கூற்ற
13.த்து ஆற்றூர் நாட்டு நாட்டவர்கள் கி
14.ராம பூதாந தம்பஸாசநம் குடுத்தபடி
15.ஞாவாற்றுக்கு வடக்கு தலைவாசலுக்கு
16.கிழக்கு நாவர் குறிச்சிக்கு தெற்கு பெரி
17.ஏரிக்கு மேற்கு நெத்தக்கரை கிராமம்
18.ஒன்றும் ஆறகளூர் திருக்காமீஸ்வர பெ
19.ரியம்மைச் சந்நதியிலே கிருட்டிணப்(ப)
20.நாயக்கர் அய்யனுக்கு புண்ணியமாக
21.ஹிர ளொதக தாறா பூறுவமாக
22.தாரைவாத்து குடுத்தப்படியாலே யி
23.ந்த கிராமத்து நான்கெல்லையில் உட்
24.பட்ட நஞ்சை புஞ்சை கரை முதலிய பு
25.வியும் நியா –அட்டபோகமாக சுவா
26.த-யங்களுக்கும் உட்பட்டு
3.2 மேலது நத்தக்கரை கல்வெட்டின் பின் பக்கம் அதே செய்தியின் தொடர்ச்சி
கல்வெட்டு பாடம் :
1..ஏற்க ஸாத்திய மாக த-காத
2.நியம விக்கிரயங்களுக்கும்
3.க்ரையமாக சர்வ மானியமாக
4.அனுபவித்துக் கொள்ளக்கட
5.வார்களாகவும் என்று ஸ்ரீ மது
6.ஸ்ரீகண்ட ஆகாசவாசி ஸ்ரீ
7.சந்திரசேகர குரு உடையார் அய்
8.யன் அவர்களுக்கு ஆற்றூர் நாட்டு
9.நாட்டவர்கள் குடுத்த கிராம
10.பூதாந தன்ம சாஸனம்
11.தான வாலஞ்யோம் ககியேதா
12.நா மேநு பாலநாய
13.தாநாத் ஸக வாகோதி
14.கைலாசநாதச் சுதம் பாதியும்
15.இந்த தன்மதுக்கு அகிதம்
16.பண்ணினவன் கெங்கைக்
17.கரையிலே காறம் பசு
18.வை கொன்ற தோஷத்தி
19.லே போகக் கடவனாகவும்
20.இப்படிக்கு நாட்டவர்கள் செய
21.ல் படிக்கு நாட்டு கணக்கு
22.ஆற்றூர் நாட்டு வெளாகா
23.மீசுவரன் எழுத்து.
20/112/2017 இன்றைய நிலையில் கல்வெட்டு

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள் பெரியேரி எலி கல்வெட்டு

பெரியேரி எலி கல்வெட்டு பின்புறம்

பெரியேரி கல்வெட்டு முன்புறம்

எலி

மைப்படி

இந்து நாளிதழ் செய்தி

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 4
பெரியேரி எலிக்கல்வெட்டு

அண்ணே இந்த மருந்தை கொடுங்க..
இந்த மாத்திரை 3 வேளைக்கு சாப்பிட்ட அப்புறம் கொடுங்க..
சீக்கிரம் நல்லாயிடுமா..
டாக்டர் செக் பண்ணிதானே எழுதியிருக்கார். சாப்பிடுங்க சரியாயிடும். அப்புறம் உகளுக்கு தெரிஞ்சி எங்கியாவது கல்வெட்டு இருக்கா..?
கல்வெட்டா...? நம்ம பெரியேரி வண்ணான் குளம் பக்கத்துல ஒரு கல்லுல எழுதியிருக்கு வேணா போய் பாருங்க...
அது எவ்வளவு முக்கியமான கல்வெட்டுன்னு அப்ப எனக்கு தெரியல. இது வரை நான் பார்த்த கல்வெட்டுலே பெரிய கல்வெட்டு அதுதான்.இது எதுவுமே தெரியாம பெரியேரி கிளம்பி போனேன்.
வண்ணான் குளம் அருகே தேடினேன். கல்வெட்டு கிடைக்கல..கொஞ்சம் உள்ள போய் தேடலாமான்னு யோசிட்டு உள்ள போனேன். நமக்கு தெரிந்தவர் காடுதான் அது
அண்ணே இங்க கல்வெட்டு ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்களே அது எங்க இருக்கு..
அதுவா...பல தலை முறையா அது இங்கதான் இருக்குன்னு கூட்டிகிட்டு போனார். இந்த கல்லுக்கு அடியில் புதையல் இருக்குமுன்னு பேசிகிறாங்க..
இருக்குமா..?
அதெல்லாம் சும்மா கதைண்ண இது சூலக்கல்லு நிலம் தானம் செய்த எல்லைக்கல்லு...
விளைநிலத்தில் பயிர்களுக்கு நடுவே பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமா அந்த கல்வெட்டு நின்று கொண்டிருந்தது.
நாலு பக்கமும் எழுத்துக்கள் இருந்துச்சி..நாலு பக்கமும் எலி உருவம் இருந்தது ரொம்ப புதுசா இருந்துச்சி..வழக்கம் போல் படம் எடுத்திட்டு கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா Mangai Ragavan ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் மூலம் படி எடுக்கப்பட்டு கல்வெட்டு படிக்கப்பட்டது. எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தமிழகத்தில் கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும். வாணகோவரையர்கள் ஆறகழூரை தலை நகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர்.இவர்கள் மாவலி வம்சத்தில் வந்தவர்களாய் சொல்லிக்கொண்டனர் .அது தொடர்பான புராண கதை மூலம் பெருச்சாளியை குல சின்னமாக கொண்டனர். ஆனால் அதற்கு ஆதாரம் எங்கும் கிடைக்காமல் இருந்தது . இந்த கல்வெட்டு மூலம் அதற்கு சான்று கிடைத்துள்ளது. ஆய்வாளர் திரு பூங்குன்றன் ஐயா பண்டை தமிழகத்தில் யானை குலம் எலி குலம் என்ற இரு அரச மரபுகள் இருந்தன. இதில் யானை குலம் எலி குலத்தை போரில் வென்றது என குறிப்பிடுகிறார். அந்த எலி குலம் வாணர் குலமாக இருக்கலாம் என கருதுகிறார்.
2017 ஆவணத்தில் வெளியிடப்பட்டது
கல்வெட்டு வாசகம்
பெரியேரி எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
சி.வீரராகவன்
வீ.மங்கயற்கரசி ராகவன் --விழுப்புரம்
ஆறகழூர்- பொன்.வெங்கடேசன்
இடம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியேரி கிராமத்தில் வண்ணான் குளம் என்ற குளத்துக்கு பின்புற வயலில் உள்ளது
காலம் : 12-13 ஆம் நூற்றாண்டு-பாண்டியன்
செய்தி :
இந்த கற்பலகையில் மொத்தம் இரண்டு தானங்களை குறிக்கும் செய்தி உள்ளது... இந்த கற்பலகையின் நான்கு புறங்களிலும் சூலங்கள் வெட்டப்பட்டுள்ளது.
முன்புறம் பூமாதேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.அதற்க்கு முன்பாக முக்காலியின் மீது இரு செல்வ குடங்கள் காட்டப்பட்டுள்ளது. இக்கல் பலகையின் ஏனைய மூன்று பக்கங்களிலும் எலிச்சின்னம்(இலச்சினை) வெட்டப்பட்டுள்ளது…தமிழகத்தில் எலி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.பின்புறம் உள்ள இரண்டாவது கல்வெட்டின் ஊடே மூசிகா(பெருச்சாளி)வாகனம் வெட்டப்பட்டுள்ளது.
இக்கற்பலகையில் உள்ள இரு கல்வெட்டுக்களும் ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் என்று துவங்குகிறது. உயிர்நம்பி அழகியானவன் என்பவர் சொன்ன வண்ணம் செய்வார் பிள்ளையார் என்ற கோயிலுக்கு அமுதுபடிக்கும் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பதற்க்கும் தேவதான இறையிலியாக குலசேகர பெரியேரி யின் கீழ் காட்டை திருத்தி இரண்டு மா நன்செய் நிலமும் ,இதனால் வரும் அனைத்து வரி ஆதாயங்களும் ஆவணி மாதம் 11ஆம் நாள் முதல் இறையிலியாக தந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
குலசேகரபாண்டியன் காலத்தில் இவனது பாண்டிய மண்டலத்தை சேர்ந்த முத்தூற் கூற்றத்து கப்பலூரை(உலகளந்த சோழநல்லூர்) சார்ந்த ஆதித்த கணபதி ஆள்வான் காடு வெட்டி என்பவர் இக்கல்வெட்டை பதிவு செய்துள்ளார்
கல்வெட்டு பாடம் :
1.ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆறகளூர்
2.நிவா வாற்றுக்கு வடகரையில் பிள்ளையார் சொ
3. ன்ன வண்ண ஞ்செய்வார் கோயில் ஆண்டார் உ
4.பய யழகியானான் தவஸ உ-யிர் நம்பிக்கு
5.இப்பிள்ளையாற்கும் அமுதுபடிக்கும் இக் கொயி
6. ல் தான் வைக்கிந் தண்ணீர் பன்(த)ர்க்கும் தெவ
7. தாந இறையிலியாக பெரிய ஏரியான குலசெ
8.கரந் பெரியஏரியில் கடமைப்.பற்று நஞ் செய் நில
9.தில் ஒன்பதாவது தன் காணியில் காடுவெட்டித்தி
10. ருத்தின நிலத்திலே ரண்டு மா நிலம் அனைத்தாதாயங்
11.களும் உட்பட்ட பதினொன்றாவது ஆவணி மாதம் முத
12.ல் இறை இலியாகத் தந்தோம் இப்படிக்கு இ ஓலை
13.பிடிபாடாகக் கொண்டு தனக்கும் தன்வர்க்கத்தார்க்
14.கும் சந்திரராதித்த வரையும் காணியாக்கி கல்லிலு
15.ம் செம்பிலும் வெட்டி கொள்க இப்படிக்கு இவை
16.பாண்டி மண்டலத்து முத்தூற்க் கூற்றத்து
17.க் கப்பலூரான உலகளந்த சொழனல்லூர் ஆ
18.தித்தன் கணவதி ஆழ்வானான் காடுவெட்டி எ
19.ழுத்து உ
2.2 மேற்படி எலி கல்வெட்டின் பின்புறம்
செய்தி :
மேற்படி சொன்ன வண்ணம் செய்வார் பிள்ளையாருக்கு அமுதுபடிக்கும் தண்ணீர் பந்தலுக்கும் குலசேகர பெரிய ஏரியின் வாய்காலுக்கு வடக்கே இரண்டாயிரம் குழி நிலம் இறையிலியாக கொடுக்கப்படுல்ளது.இதையும் கணபதி ஆழ்வாளன் காடுவெட்டியால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு பாடம்:
பெரியேரி சூலக்கல் பின்புறம்(மிகுதியாய் சிதைந்த கல்வெட்டு)
------------------------------------------------
1.ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆறகளூர் நிவா
2.வாற்று க்கு வடகரை யில் பிள்ளையார் சொன்ன
3.வண்ணெஞ் செய்(சிற்பம்) வா
4.ர்க் கொயிலில்(சிற்பம்) ஆண்டார் இ
5.ப்பட்ட யழகியானான் . .
6. (சிற்பம்) உயிர் நம்பிக்கும்
7.க்கு அமுதுபடிக்கும் இத்திரு வா . . . .
8.ணீர் வைக்கவும் குலசேகரன் பெரிய ஏரி
9. - வாய்காலுக்கு வடக்கும் இவ் . . .
10.ஏரி வடக்கு மேற்கும் தேவதான …இ
11க் காடு வெட்டிப் பயிற் செய்து . . நஞ்
12.செய் குழி யிரண்டாயிரத்துக்குக் குழி உ
13.ள்ளிட்ட அனைத்தாதாயமும் உட்பட . . . . சந்திராதித்
14.தவரை தேவதான இறையிலியா . . . . . இப்படி
15.க்கு கல்லிலுஞ் செம்பிலும் வெட். . . .
16.இப்படிக்கு இவை பாண்டிய மண்டலத்து முத்தூற்று
17.கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ னல்லூர்
18.ஆதித்தன் கணவதி ஆழ்வாளன் காடுவெட்டி எழுத்து.

சனி, 16 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

தினமணி 16/12/2017

தினமலர் 16/12/2017

காலைக்கதிர் 16/12/2017

கன்னட கல்வெட்டு

கோயில் கல்வெட்டு

தானத்தார்

காமக்காபாளையம் கல்வெட்டு

பைக் மெல்ல தலைவாசல் வீரகனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. கண்கள் ரோட்டின் இருபுறமும் அலை பாய்ந்து கொண்டிருந்தது..ஏதாவது கல்வெட்டு கிடைக்குமா நடுகல் கிடைக்குமா என பார்த்துக்கொண்டே பயணித்தேன். ஆறகழூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர் காமக்காபாளையம். ஆறகழூருக்கும் காமக்காபாளையத்துக்கும் நீண்ட நாளாகவே தொடர்பு உண்டு. மெல்ல வண்டி காமக்காபாளையத்தை நோக்கி பயணித்தது. வழியில் நிறைய சுமை தாங்கி கற்கள் கண்ணில் பட்டது. காமக்காபாளையம் அடைந்ததும் அங்கிருந்த பெரியவரிடம் விசாரித்தேன்
அய்யா இங்க ஏதாவது கல்வெட்டு நடுகல் இருக்கா..?
புரியலப்பா...
கல்லுல எழுத்து அடிச்சிருப்பாங்க..அதான் கல்வெட்டு
ஒரு வீரன் கையில வில் இல்லனா கத்தி வச்சிருப்பான். அது நடுகல். அந்த மாதிரி ஏதாவது இருக்குங்களா...?
தெரியலப்பா..இப்படியே நேரா போனா அங்க சிவன் கோயிலு இருக்கு. அங்க போய் கேட்டு பாரு..
வண்டி கோயிலை நோக்கி திரும்பியது. கோயில் பூட்டியிருந்தது. கோயிலுக்கு முன்னாடி ஒரு அம்மா நெல் காய வைத்து கொண்டிருந்தார். நெல்லின் வாசம் நாசியில் புகுந்து கடந்து சென்றது.
ஏங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..?
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே...
கல்லுல எழுத்து எழுதியிருப்பாங்கம்மா..
ஓ...அதுவா...அந்த வயலுகிட்ட நிறைய முள்ளு மொளச்சி கெடக்கே அதுக்குள்ள ஒரு கல்லு இருக்கு..
போய் பாருங்க...
கோயில் எப்ப திறப்பாங்க...?
இங்க வெங்கடேசன்னு ஒருத்தர் Tvenkatesan Tvenkatesanஇருக்கார் அவர்தான் கோயிலை பாத்துகிறார். அவரை போய் பாருங்க..
நன்றி சொல்லிட்டு முள் புதர் அருகே போனேன்..கிட்டவே நெருங்க முடியல..
அங்க பாத்த கல்வெட்டை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். வெங்கடேசன் சாரை தேடி போனேன். என்னை அறிமுகப்படுத்திகொண்டேன். கடைசியில் பாத்தா அவர் என் உறவினர். அன்போடு என்னை கோயிலுக்கு அழைத்து வந்தார். கோயிலைப்பற்றி எல்லா விவரங்களும் சொன்னார்.
அந்த கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு இருக்கு என காண்பித்தார். 9 வரிகளில் அருமையான கல்வெட்டு அது. அதை படம் எடுத்துக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். என் குருநாதரான விழுப்புரம் வீரராகவன் ஐயாவுக்கு தகவல் சொன்னேன். ஞாயிற்று கிழமை ஐயா வந்து விட்டார். நானும் அய்யாவும் சென்று வெங்கடேசன் சாரை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று கல்வெட்டை படி எடுத்தோம். முள்ளுக்குள் இருந்தது ஒரு கன்னட கல்வெட்டு. அது பற்றி பிறகு சொல்கிறேன்.
கோயிலில் இருந்த கல்வெட்டை படித்து வெங்கடேசன் சாருக்கு சொன்னோம். எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்தார்..
மாலை 5 மணிக்கு சூடா வடையும் டீயும் வந்தது. களைப்பு போக சற்று ஓய்வெடுத்து விட்டு கிளம்பினோம்.
அந்த செய்தி இன்றைய காலைக்கதிர், தினமணி, தினமலர் நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனகளுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ் செல்வன், திரு தினமணி சரவணன், திரு தினமலர் ஆத்தூர் கிருஷ்ணன் ஆகியோருக்கு மிக்க நன்றி.
சேலம் நியூஸ் டெய்லி வலைதளத்தில் வெளியிட்ட செய்தியாளர் திரு திரு ராஜசேகரன் அவர்களுக்கு மிக்க நன்றி
தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது.
விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மகதை மண்டலத்தில் உள்ள ஓர் ஊராக காமக்காபாளையும் இருந்துள்ளது.
கி.பி. 1490 ஆம் ஆண்டு தை மாதம் 5 ஆம் தேதி இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு சொல்லும் செய்தி
காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தகிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்தில் வரும் வருவாயை கொண்டு இந்த பூஜையை தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும் . இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் பொதுவாக தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என வரும். இங்கு காசியிலே என்று வருவது குறிப்பிடதக்கதாகும். காசிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள கிணறும் காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டன . இந்த கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தகிரயமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகும்.
இந்த கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் கி.பி. 1751 ஆம் ஆண்டை சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழி கல்வெட்டு இதே குழுவினரால் சென்ற ஆண்டு கண்டறிப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் காமக்காபாளையம் வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் என்பதை அறியலாம். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கல்வெட்டு பற்றிய விவரம்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காமக்காபாளையம் கிராமம். அருணாசலேசுவரர் கோயில் அர்த்த மண்டபம் விநாயகர் மாடத்துக்கு அருகே
காலம் : சகம் 1412 கலியுகம் 4871 விஜய தை 5 பொ.யு. 1490
கல்வெட்டு வாசகம்
1 . ஸ்வஸ்திஸ்ரீ விஜய வருடம் தை மாதம் ஸ்ரீ [சாலி] வாகன
2. சகாப்தம் 1412 கலியுகம் 4871 இதன்மேல் செல்
3. லா நின்ற விக்குறுதி வருடம் தை மாதம் 5 காமக்காபாளையத்திலிருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவர
4. மிசதி இவ்வூரிலிருக்கும் செல்லப்பிள்ளை புத்திரன் நமச்சிவாய பிள்ளை தான சாசனம் பண்ணி கொடுத்
5. தேன் இந்த கிராமத்திலே பட்ட விருத்தி மானியத்தில் இப்படி யிசையில் குகிரினி ஏ[யே]
6. தகதால் பூற்வமாக சுத்த கிரயம்மாக வாங்கினது குழி 15 இந்த குழி
7. ஸ்ரீ அருணாசலேசுவர சுவாமி விசேச கட்டளை செலவுக்கு தான சாசனம் கொடுத்தேன்
8. இந்த தர்மம் அகுதம் பண்ண பேற் காசியிலே காராம் பசுவு கொன்ன பாவத்திலே போ-
9. வாராகவும் தர்மம் - - - - விதமாக செந்திர சூரியா தியளவும் சாஷி தேவிக்காய்

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

காமக்காபாளையம் கல்வெட்டு
தினமலர் செய்தி 16/12/2017


தினமணி செய்தி 16/12/2017

காலைக்கதிர் செய்தி 16/12/2017

காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு

காமக்காபாளையம் அருணாசலேசுவரர் கோயில் கல்வெட்டு

அருணாசலேசுவரர் கோயில்

பைக் மெல்ல தலைவாசல் வீரகனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. கண்கள் ரோட்டின் இருபுறமும் அலை பாய்ந்து கொண்டிருந்தது..ஏதாவது கல்வெட்டு கிடைக்குமா நடுகல் கிடைக்குமா என பார்த்துக்கொண்டே பயணித்தேன். ஆறகழூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர் காமக்காபாளையம். ஆறகழூருக்கும் காமக்காபாளையத்துக்கும் நீண்ட நாளாகவே தொடர்பு உண்டு. மெல்ல வண்டி காமக்காபாளையத்தை நோக்கி பயணித்தது. வழியில் நிறைய சுமை தாங்கி கற்கள் கண்ணில் பட்டது. காமக்காபாளையம் அடைந்ததும் அங்கிருந்த பெரியவரிடம் விசாரித்தேன்
அய்யா இங்க ஏதாவது கல்வெட்டு நடுகல் இருக்கா..?
புரியலப்பா...
கல்லுல எழுத்து அடிச்சிருப்பாங்க..அதான் கல்வெட்டு
ஒரு வீரன் கையில வில் இல்லனா கத்தி வச்சிருப்பான். அது நடுகல். அந்த மாதிரி ஏதாவது இருக்குங்களா...?
தெரியலப்பா..இப்படியே நேரா போனா அங்க சிவன் கோயிலு இருக்கு. அங்க போய் கேட்டு பாரு..
வண்டி கோயிலை நோக்கி திரும்பியது. கோயில் பூட்டியிருந்தது. கோயிலுக்கு முன்னாடி ஒரு அம்மா நெல் காய வைத்து கொண்டிருந்தார். நெல்லின் வாசம் நாசியில் புகுந்து கடந்து சென்றது.
ஏங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..?
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே...
கல்லுல எழுத்து எழுதியிருப்பாங்கம்மா..
ஓ...அதுவா...அந்த வயலுகிட்ட நிறைய முள்ளு மொளச்சி கெடக்கே அதுக்குள்ள ஒரு கல்லு இருக்கு..
போய் பாருங்க...
கோயில் எப்ப திறப்பாங்க...?
இங்க வெங்கடேசன்னு ஒருத்தர் Tvenkatesan Tvenkatesanஇருக்கார் அவர்தான் கோயிலை பாத்துகிறார். அவரை போய் பாருங்க..
நன்றி சொல்லிட்டு முள் புதர் அருகே போனேன்..கிட்டவே நெருங்க முடியல..
அங்க பாத்த கல்வெட்டை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். வெங்கடேசன் சாரை தேடி போனேன். என்னை அறிமுகப்படுத்திகொண்டேன். கடைசியில் பாத்தா அவர் என் உறவினர். அன்போடு என்னை கோயிலுக்கு அழைத்து வந்தார். கோயிலைப்பற்றி எல்லா விவரங்களும் சொன்னார்.
அந்த கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு இருக்கு என காண்பித்தார். 9 வரிகளில் அருமையான கல்வெட்டு அது. அதை படம் எடுத்துக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். என் குருநாதரான விழுப்புரம் வீரராகவன் ஐயாவுக்கு தகவல் சொன்னேன். ஞாயிற்று கிழமை ஐயா வந்து விட்டார். நானும் அய்யாவும் சென்று வெங்கடேசன் சாரை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று கல்வெட்டை படி எடுத்தோம். முள்ளுக்குள் இருந்தது ஒரு கன்னட கல்வெட்டு. அது பற்றி பிறகு சொல்கிறேன்.
கோயிலில் இருந்த கல்வெட்டை படித்து வெங்கடேசன் சாருக்கு சொன்னோம். எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்தார்..
மாலை 5 மணிக்கு சூடா வடையும் டீயும் வந்தது. களைப்பு போக சற்று ஓய்வெடுத்து விட்டு கிளம்பினோம்.
அந்த செய்தி இன்றைய காலைக்கதிர், தினமணி, தினமலர் நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளது.
செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனகளுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ் செல்வன், திரு தினமணி சரவணன், திரு தினமலர் ஆத்தூர் கிருஷ்ணன் ஆகியோருக்கு மிக்க நன்றி.
சேலம் நியூஸ் டெய்லி வலைதளத்தில் வெளியிட்ட செய்தியாளர் திரு திரு ராஜசேகரன் அவர்களுக்கு மிக்க நன்றி
தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது.
விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மகதை மண்டலத்தில் உள்ள ஓர் ஊராக காமக்காபாளையும் இருந்துள்ளது.
கி.பி. 1490 ஆம் ஆண்டு தை மாதம் 5 ஆம் தேதி இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு சொல்லும் செய்தி
காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தகிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்தில் வரும் வருவாயை கொண்டு இந்த பூஜையை தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும் . இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் பொதுவாக தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என வரும். இங்கு காசியிலே என்று வருவது குறிப்பிடதக்கதாகும். காசிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள கிணறும் காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டன . இந்த கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தகிரயமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகும்.
இந்த கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் கி.பி. 1751 ஆம் ஆண்டை சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழி கல்வெட்டு இதே குழுவினரால் சென்ற ஆண்டு கண்டறிப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் காமக்காபாளையம் வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் என்பதை அறியலாம். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கல்வெட்டு பற்றிய விவரம்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காமக்காபாளையம் கிராமம். அருணாசலேசுவரர் கோயில் அர்த்த மண்டபம் விநாயகர் மாடத்துக்கு அருகே
காலம் : சகம் 1412 கலியுகம் 4871 விஜய தை 5 பொ.யு. 1490
கல்வெட்டு வாசகம்
1 . ஸ்வஸ்திஸ்ரீ விஜய வருடம் தை மாதம் ஸ்ரீ [சாலி] வாகன
2. சகாப்தம் 1412 கலியுகம் 4871 இதன்மேல் செல்
3. லா நின்ற விக்குறுதி வருடம் தை மாதம் 5 காமக்காபாளையத்திலிருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவர
4. மிசதி இவ்வூரிலிருக்கும் செல்லப்பிள்ளை புத்திரன் நமச்சிவாய பிள்ளை தான சாசனம் பண்ணி கொடுத்
5. தேன் இந்த கிராமத்திலே பட்ட விருத்தி மானியத்தில் இப்படி யிசையில் குகிரினி ஏ[யே]
6. தகதால் பூற்வமாக சுத்த கிரயம்மாக வாங்கினது குழி 15 இந்த குழி
7. ஸ்ரீ அருணாசலேசுவர சுவாமி விசேச கட்டளை செலவுக்கு தான சாசனம் கொடுத்தேன்
8. இந்த தர்மம் அகுதம் பண்ண பேற் காசியிலே காராம் பசுவு கொன்ன பாவத்திலே போ-
9. வாராகவும் தர்மம் - - - - விதமாக செந்திர சூரியா தியளவும் சாஷி தேவிக்காய்


http://cfcm.salemonline.in/article/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-527-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2033526


http://www.dinamalar.com/news_detail.asp?id=1919912

http://tamil.eenaduindia.com/State/Salem/2017/12/15170620/500-years-old-inscription-found-in-selam.vpf


http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/dec/16/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87527-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2827422.html

வியாழன், 14 டிசம்பர், 2017

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 3 - கன்னட துண்டு கல்வெட்டு

ரொம்ப சிரமப்படாம கிடைத்த கல்வெட்டு இது
சென்ற வருடம் அத்தை மருமகளுக்கு வளைகாப்பு. அந்த நிகழ்சிக்காக ஆறகழூர் தேரோடும் வீதியில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். சின்ன வயசில் இருந்து விளையாடிய இடம்தான் அது. முதல் பந்தியில் சாப்பிட்டுகிட்டு இருந்தாக..நான் வெளியே நாற்காலியில் உட்காந்துகிட்டு இருந்தேன்..வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் மாடெல்லாம் கட்டி வச்சிருப்பாங்க..
அருகில் உட்காந்திருந்த ஒருவர் என்னப்பா வியாபாரமெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..
நல்லா போயிட்டு இருக்கண்ணே..
எவ்வளவு பழமையான ஊரு இது .ஒரு தேரு போட்டா சுத்தி இருக்கிற எல்லா ஊரில் இருந்தும் சனம் வரும். ஒரு வாரத்துக்கு ஊரே அமக்களப்படும்..இப்ப தேர் போட்டே ரொம்ப வருசமாச்சி...
எடுத்து செய்ய ஆள் இல்லன்ன.....எல்லாத்துக்கும் அவங்கவங்க வேலை..பாதிபேர் வெளியூரில் வேலை கிடைச்சி அங்கியே செட்டில் ஆயிட்டாங்க..இங்க கொஞ்சபேர்தான் இருந்து அல்லாடிகிட்டு இருக்கோம்.
இப்படியே உரையாடல் தொடர்ந்தது.
சட்டுன்னு உச்சா வர்ர மாதிரி இருந்திச்சி..போயிட்டு திரும்பி வரும்போது வழியில் ஒரு கல்லு நின்னுச்சி .வழக்கம் போல் அந்த கல்லை உத்து உத்து பாத்தேன்..
அட...சூப்பரு.. 2 வரியில் எழுத்துக்கள் இருந்திச்சி..
சந்தோசத்தில் தலை கால் புரியல...ஆனா அது கன்னடத்தில் இருந்துச்சி...அதை அப்படியே என் செல்லில் உள் வாங்கிகொண்டேன்..
அதை முகநூலில் பதிவு செய்த போது நண்பர்கள் அதை படித்து சொன்னார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் 2 வார்த்தையா இருந்தாலும் முக்கியமான வார்த்தைகள்.
ஆறகழூர் காமநாதயீஸ்வரன் கோயில் இருப்பதால்
பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பல குடும்பங்களில் காமநாதன் என்று பெயர் வைப்பார்கள்.
12 ஆம் நூற்றாண்டு கோயிலான திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் தேவரடியார்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இறைவனுக்கு பூசை செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர். கல்வெட்டுகளும் இவர்களை பற்றி பேசுகின்றன..இவர்கள் மாணிக்கிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
இந்த கல்வெட்டில் இருந்த இரு வார்த்தைகள் இவைதான்
காமநாத
மாணிக்ய
இது 2017 ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறகழூர் கன்னட கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
காலம் :18 ஆம் நூற்றாண்டு
இடம் : தேரோடும் வீதி மணி வீட்டுக்கு பின்புறம்
செய்தி : பெயர் குறித்துள்ள
கல்வெட்டு வாசகம்
1.காமநாத
2. மாணிக்ய
ஆறகழூர் கன்னட கல்வெட்டு

காமநாத
மாணிக்ய

ஆவணம் 2017



புதன், 13 டிசம்பர், 2017

Aragalur ஆறகழூர் கல்வெட்டுக்கள்


ஆறகழூர் கல்வெட்டு எண் 2



ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 2 - தன்மதாவள கல்வெட்டு

வழக்கம் போல் காலை 7 மணி ஆறகழூர் டீக்கடையில் சூடா ஒரு வடை சாப்பிட்டுவிட்டு டீ குடித்து கொண்டிருந்தேன். உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை ஓடிக்கொண்டிருந்தது. காரசாரமான விவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப ஊர்காரர் ஒருவர்..
என்னப்பா நீ கல்லு கல்லா தேடிகிட்டு இருக்கன்னு பேசிகிறாங்க....
ஆமாண்ணே...நம்ம ஊரு வரலாற்றை தெரிஞ்சிக்க கல்வெட்டுகளை தேடிகிட்டு இருக்கேன்...
கல்வெட்டுன்னா...?
கல்லுல எழுதிருப்பாங்கண்ணே.....
அதுதான் நம்ம செவன் கோயிலுல நிறைய எழுதியிருக்கே....
அதெல்லாம் படிச்சிட்டாங்கண்ணே...அதை தவிர ஊருல வாய்க்க வரப்புல ஏதாவது இருக்கான்னு தேடிகிட்டு இருக்கேன்..
அட...ஆமாம்..எங்க வயலுக்கு பக்கத்துல வரப்புல ஒரு கல்லு கெடக்கு..அதிலியும் ஏதோ எழுத்து இருக்குற மாதிரிதான் தோணுது..
ஆஹா....சூப்பருண்ணு..உடனே அதை நான் பாக்கணுமே...!!!!
இன்னிக்கி கொஞ்சம் வேலையிருக்கு நாளைக்கு வா காட்டுறேன்...
அந்த வயலில் 5 வருசம் முன்னாடி உழவு ஓட்டும்போது டிராக்டர் பொதுக்குன்னு உள்ள இறங்கிடுச்சி.. அந்த இடத்தில் கிணறு இருந்திருக்கும் போல...அதுவுமில்லாம நிறைய பானை ஓடெல்லாம் கிடக்கு...இந்த இடத்தில் தலையில் கூடை மாதிரி (முக்குடை) வச்சிகிட்டு ஒரு ஆணும் பொண்ணும் நிண்ணாங்க..அதை தோட்டி சிலை..தோட்டிச்சி சிலை(சமண தீர்த்தங்கரரும் அம்பிகா யட்சியும்) ந்னு சொல்லுவாங்க.. 30 வருசத்துக்கு முன்னாடி அது காணாபோச்சி..
இனம் புரியாத சந்தோசம்..அதை கொண்டாட மொறு மொறுன்னு இன்னும் 2 வடையை வயித்துக்குள் அனுப்பிட்டு..பொழப்பை பாத்தேன். ராத்திரியெல்லாம் தூக்கமே வரல...அந்த கல்வெட்டுல என்ன இருக்கும். இந்த இடத்திலதானே நாம ஜினாலய கல்வெட்டு கண்டுபிடிச்சோம்..எப்படா விடியுமுன்னு அப்படியே தூங்கிப்போனேன்...
கோழி கூவுறத்துக்கு முன்னாடியே எந்திறிச்சி வயக்காட்டு பக்கம் ஓடினேன். சுத்தி சுத்தி தேடினேன்..கல்வெட்டு கண்ணுல சிக்கல . ஒரு மணி நேர தேடலுக்கு பின் ஒரு வரப்பில் மண் மூடிய நிலையில் ஒரு கல்லு தெரிஞ்சிச்சி..ஓடிப்போய்..அந்த மண்ணை எல்லாம் தொடச்சிட்டு பாத்தா..எழுத்துக்கள்..
சந்தோசத்துல தலைகால் புரியல..அப்ப மைதா மாவு டெக்னிக் எல்லாம் வரல..பக்கத்தில் இருந்த செடி கொடியெல்லாம் பறிச்சேன்..கல்வெட்டை சுத்தமா மண்ணெல்லாம் அகற்றி தொடச்சிட்டு இலை தழை எல்லாம் வச்சி தேச்சேன்..ஓரளவு எழுத்து தெரிந்தது. அதை அப்படியே செல்லிலும் கேமிராவிலும் கிளிக்கினேன்..
புதியவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் பேசி..துறையில் ஈடுபாடு கொள்ள வைக்கும் பேராசிரியர் ஐயா Rajagopal Subbiahஅவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.. ஐயா அதை படித்துக்கொடுத்து பொருளும் சொன்னார்..2016 ஆவணத்திலும் பதிவு செய்தார்
இந்த கல்வெட்டின் இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் வருகிறது. தாவளம் என்பது வணிகம் செய்யும் இடத்தை குறிப்பதாகும். அதியமான் பெருவழி கல்வெட்டில் நாவற்தாவளம் என்று வருகிறது..அந்த நாவற்தாவளம் எங்கிருக்கிறது என்பதை இன்னும் அறிய முடியவில்லை.இந்த ஆறகழூர் கல்வெட்டில் வரும் தன்மதாவளம் என்ன..? எது என்பது நேற்று வரை தெரியவில்லை இன்று திரு KPichaipillaiஅவர்கள் திருவண்ணாமலையில் இருந்த ஒரு செப்பேட்டு செய்தியை பகிர்ந்திருந்தார் அதில்

சாலிவாகன சகாப்தம் வருஷம் 1613 மேல் பிரசோத்பத்தி வரு.தைமாதம் 3 தேதிசுபமஸ்து ஸ்ரீமது சகலகுண சம்பண்ணரான. அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சு அவந்திகாபுரி தவராள்பதி சப்தநகரப் பிரதாபரான கிஸகிந்த மலைக்குடையவரான. பம்பாநதிக்கு அதிபரான வைகுண்ட வளநாதரான. மாருதப் புரவிக்குடைய வரான கமலாகாந்தி கெய்ட் தேருக்குடையவரான. கெருடக்கொடிக்கு உடையவரான. பஞ்ச காவியத் தலைவரான எற்றா கைக்கு மாற்றாடவரான. தன்மதா வளரான. மணலூர்ப்பேட்டை பச்சையப்ப செட்டியாரய்யன் முதலான ஆயிரவர் நகரத்தாரும் திருவண்ணாமலை அருணாசலேசுவர. சுவாமியாருக்கு உச்சிக்கால கட்டளைக்கும் மடத்து தர்மத்துக்கும் மகமை உண்டுபண்ணி அம்பத்தாறு தேசத்து நகரத்தாறும் சித்திலிங்கப் பண்டாரத்தின் கையில் தாம்பிர சாசனம் எழுதிக் குடுத்த விபரம்.
என்று வருவதில் தன்மதா வளரான. மணலூர்ப்பேட்டை பச்சையப்ப செட்டியாரய்யன் முதலான ஆயிரவர் நகரத்தாரும் என்பவர்கள்தான் ஆறகழூர் கல்வெட்டில் தன்மதாவள தந்மம் என குறிப்பிடபட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது..
கல்வெட்டு வாசகம்
ஆறகழூர் கல்வெட்டுக்கள்
1.2 தன்ம தாவளம் கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
பேராசிரியர் சு.இராசகோபால் , சென்னை
இடம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கோட்டைக்கரைக்கு அருகே இராமன் என்பவரின் வயலில் உள்ள கல்வெட்டு
காலம்: 13-14 ஆம் நூற்றாண்டு
செய்தி : வாணியர் செலுத்த வேண்டிய வரிகளுக்கு விலக்களித்து அவ்வரி வருவாயை உலகங்காத்த சோளீஸ்வரர் கோயில் பூசை மற்றும் திருப்பணிகளுக்கு முதலாக(உடல்) வைத்துக்கொள்ள கையெழுத்திட்டு களப்பாளராயர் கொடுத்த ஆணை(திருமுகம்) கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. தன்மதாவளம் என்ற சொல் வருவது சிறப்பான செய்தி.
ஆறகழூர் ஒரு வணிக நகரமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

கல்வெட்டு பாடம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ களப்
2.பாளராயனும் புரவ
3.ரியாருக்கு செய்யும்படி
4.வடக்கில் வாயிலில் உலக
5.ங்காத்த சோளீச்0வரமு
ஆறகழூர் தன்மதாவள கல்வெட்டை சுத்தம் செய்தபோது

தன்மதாவள கல்வெட்டுடன் நான்

தன்மதாவள கல்வெட்டு ஆறகழூர்

ஆவணம் 2016

6.டைய னாயனார்கு வா
7.ணியர்கு முந்பு நம் ஒன்
8.பதாவது தை மாதம் மு
9.தல் இ நாயனார்கு பூ
10.ஜைக்குந் திருப்பணி
11.க்குமுடலாகக் குடுத்
12.தோம் என்று திருவெழு
13.த்துச் சாத்தின திருமுகப்
14.படிக்கு கல்வெட்டு
15. இது தன்ம தாவ
16.ளந் தந்மம்

#ஆறகழூர்பொன்.வெங்கடேசன்

புதன், 6 டிசம்பர், 2017

araalur ஆறகழூர் கல்வெட்டுக்கள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 1. ஜினாலய கல்வெட்டு

2016 ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஆறகழூர் வெங்கடேசன் பொன் Mangai Ragavan சி.வீரராகவன் சார்

ஆறகழூர் பகுதியில் முதன் முதலில் 2015ல் நான் கண்டறிந்த முதல் கல்வெட்டு இதுவாகும்.
1.1. ஆறகழூர் ஜினாலய கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
சி.வீரராகவன்
வீ.மங்கையர்கரசி ராகவன்
இடம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கோட்டைகரைக்கு அருகே கலியன் என்பவரின் வயலுக்கு அருகே
காலம்: பொன்பரப்பின பெருமாள் ,வாணகோவரையன் ,13ஆம் நூற்றாண்டு
செய்தி:
பொன்பரப்பின பெருமாள், மற்றும்
நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் இங்கு ஒரு
ஸ்ரீகோயில் ஜிநாலயத்தையும், நாற்பத்தெண்ணாயிர பெரும்பள்ளி
என்ற சமணப்பள்ளியையும் பராமரித்ததை குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டில் குறியீடுகள் காணப்படுகின்றன
பூமாதேவி அல்லது சமண உருவம்,இருபுறமும் சாமரம்,கண்ணாடி காட்டப்பட்டுள்ளது, ஏர்கலப்பை,உடுக்கை,சுத்தியல்,கொரடு, குறுவாள், குத்து விளக்கு காணப்படுகிறது. முக்காலியின் மீது பூர்ணகும்பமும் அதன் மேல் அம்புக்குறி அல்லது மீன் போன்ற ஒன்றிலிருந்து ஓர் உருவம் வருவதை போல் உள்ளது..இது ஆய்வுக்கு உரிய ஒன்றாகும் .இந்த ஜிநாலயத்தில் இருந்த ஒரு உலோக தீர்தங்கரர் சிலையும்,ஒரு வெள்ளைக்கல்லால் ஆன சமண அருகர் சிலையும், ஒரு உலோக சமண யட்ஷி சிலையும் இன்றும் ஆறகழூர் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.












கல்வெட்டு பாடம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ இந்த
2 ..ஸ்ரீகொயில் பொன் 
3. .பரப்பின பெருமாள்
4. .ஜிநாலயமான
5. .நாற்பத்தெண்ணா
6. .யிரப் பெரும்பள்ளி
7. நாற்பத்தெண்ணா
8. யிரவர் ரக்‌ஷை