வியாழன், 23 ஏப்ரல், 2015

aragalur-ஆறகளூர் கல்வெட்டுக்கள் எண் 33

கீழ் வரும் இந்த கல்வெட்டில் தேவதானக் குடிமக்களாகத் தந்தோம்------இதன் பொருள் கொஞ்சம் சொல்லுங்க..சார்
-------------------------------------------------------------------------------------------------------------

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33

-------------------------------------------------------------------------------------------------
ஊர்:ஆறகளூர் வட்டம்:ஆத்தூர்
திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்
அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்
காலம்: கி.பி.1287
மொழி:தமிழ் க.ஆ.அ. 138-1913
செய்தி :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய செய்தியை குறிக்கிறது..

கல்வெட்டு ;
1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ ர்க் கூற்றத்து ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு

2. ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்

3, டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்
குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா 

4. டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)

5. ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்
கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்

6. த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக