காமநாதீஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமநாதீஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 20 செப்டம்பர், 2015
aragalur-ஆறகளூர் அம்மன் கோவில் கல்வெட்டு
லேபிள்கள்:
அம்மன்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
கல்வெட்டு,
காமநாதீஸ்வரர் கோவில்,
aragalur,
inscription,
kamanatha esvaran
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
வியாழன், 4 ஜூன், 2015
வன்நெஞ்சன் நில அளவு கோள்
வன்நெஞ்சன் அளவு கோள்
--------------++------++++++++++++இன்றைக்கு நாம் நிலங்களை அளக்க அடி கணக்கை பயன்படுத்துகிறோம். 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரில் வன்நெஞ்சன் என்ற அளவு கோல் பயன்படுத்த ப்பட்டுள்ளது.அது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில் ஆறை நாயகன் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ளது
இந்த அளவு கோல் என் ஊர் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ளது..இது பற்றி கல்வெட்டிலும் குறிப்பு உள்ளது..கல்வெட்டில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் வன்னெஞ்சன் என்ற அளவு கோலல் அளக்கப்பட்டதாய் சொல்லப்பட்டுள்ளது..எங்கள் ஊரை தலை நகராக கொண்டு ஆண்ட வாண கோவரையர்கள் சோழர்களின் கீழ் குறு நில மன்னர்களாய் இருந்தவர்களே..எங்கள் ஊருக்கு அருகே உள்ள கூகையூர் கோவிலிலும் இதே போன்ற அளவு கோல் செதுக்கப்பட்டுள்ளது
ஒரு தூணின் மூன்று புறங்களில் இது செதுக்கப்பட்டுள்ளது..
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
காமநாதீஸ்வரர் கோவில்,
வன்னெஞ்சன்,
aragalur,
kamanatha esvaran,
vannenjan
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
வியாழன், 23 ஏப்ரல், 2015
aragalur-ஆறகளூர் கல்வெட்டுக்கள் எண் 33
கீழ் வரும் இந்த கல்வெட்டில் தேவதானக் குடிமக்களாகத் தந்தோம்------இதன் பொருள் கொஞ்சம் சொல்லுங்க..சார்
-------------------------------------------------------------------------------------------------------------
ஊர்:ஆறகளூர் வட்டம்:ஆத்தூர்
திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்
அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்
காலம்: கி.பி.1287
மொழி:தமிழ் க.ஆ.அ. 138-1913
செய்தி :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய செய்தியை குறிக்கிறது..
கல்வெட்டு ;
1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ ர்க் கூற்றத்து ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு
2. ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்
3, டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்
குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா
4. டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)
5. ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்
கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்
6. த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து
-------------------------------------------------------------------------------------------------------------
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33
-------------------------------------------------------------------------------------------------ஊர்:ஆறகளூர் வட்டம்:ஆத்தூர்
திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர்
அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன்
காலம்: கி.பி.1287
மொழி:தமிழ் க.ஆ.அ. 138-1913
செய்தி :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய செய்தியை குறிக்கிறது..
கல்வெட்டு ;
1. ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆற்றூ ர்க் கூற்றத்து ஆறகளூர் உடையார் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயில்ந் தானத்தார்க்கு
2. ஆறகளூர் வடக்கு வாசலுக்குப் புறம்பு தாங்கள் ஏறுவித்த தந்துவாய்க் குடிமக்களை பத்தாவது ஆனிமாதம் இக்கோயில்க் கண்
3, டியதேவர் எழுந்தருளிவித்த குலசேகர ஆவுடையார்க்கு தேவதானக்
குடிமக்களாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபா
4. டாகக் கொண்டு தேவதானக் குடிமக்கள்க்சந்திராதித்தவற் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கடமை போக(போக்கறு)
5. ப்பித்துக் கொள்க இப்படிக்கு இவை பண்டி மண்டலத்து முத்தூர்க்
கூற்றத்துக் கப்பலூர் ஆன உலகளந்தசோழநல்லூ ர் ஆதித்
6. த கணபதியாழ்வானான காடுவெட்டு எழுத்து
புதன், 18 மார்ச், 2015
aragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கேற்பு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருக்காமீசுவரமுடைய நாயனார்) கோவிலில் பைரவர் பூசை வெகு சிறப்பாய் நடை பெற்றது...
மாலை 3 மணி அளவில் தமிழக அமைச்சர்கள்மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி B.sc(நெடுஞ்சாலை (ம)சிறு துறைமுகங்கள் துறை) அமைச்சர் அவர்களும்
மாண்புமிகு ப.வளர்மதி(சமூக நலம்(ம)சத்துணவு துறை அமைச்சர்
அவர்களும் கலந்து கொண்டார்கள்....தினத்தந்தி செய்தி
லேபிள்கள்:
அஷ்டபைரவர்,
ஆறகழூர்,
ஆறகளூர்,
காமநாதீஸ்வரர் கோவில்,
aragalur,
ashtapairavar,
kamanatha esvaran,
siva temple
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
வெள்ளி, 13 மார்ச், 2015
aragalur-ஆறகழூர்
காலத்தின் குரல்....மனசாட்சியின் குரல்....
--------------------------------------------------------------------------------
1000 ஆண்டுகளுக்கு முன் சிவனுக்காக புகழ் பெற்ற ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீச்சுரம்) ஆலயம் பல ஏற்ற தாழ்வுகளுக்கு பின் இன்று பைரவருக்காக தமிழகம் முழுக்க புகழ் பெற்று விளங்குகிறது.....யாருக்காக புகழ் பெற்றால் என்ன..???? புகழ் பெறுவது என் ஊர்..என் கிராமம்...இழந்த பெருமையை மீட்டெடுக்க யார் உதவி செய்தால் என்ன...???? !!!!1
மண்ணின் வேட்கை....என் மண்ணின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் நானும் ஒரு சுயநலவாதியே......
திங்கள், 9 மார்ச், 2015
aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்
கி.பி.1207 ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஆறகழூர் திருக்காமீசுவரமுடைய நாயனார்(காமநாதீஸ்வரர்) கோவில் திருக்கோலம் பூண்டிருந்தது கோவில் எங்கும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம்..அனைவர் முகத்திலும் அளவில்லா மகிழ்சி...
மன்னர் வாணகோவரையர் மற்றும் சான்றோர்கள் அமர்ந்துள்ளனர்.
ஆறகழூரை சார்ந்த செல்வன் சிவதொண்டன் மாலை மரியாதையோடு அழைத்து வரப்படுகிறார்...மக்கள் கரகோசம் செய்து சிவ தொண்டனை வரவேற்கின்றனர்......
அப்படி என்ன செய்து விட்டார் சிவதொண்டன்.....?
அப்பர்,சுந்தரர்,சம்மந்தர் ஆகியோருக்கு சிலைகள் செய்து அதை கோவிலின் சுற்றுபிரகாரத்தில் அமைத்து நால்வருக்கும் திருமஞ்சனம்,திருவிளக்கு திருப்பள்ளிதாமம்,மற்றும் கோவில் பூசை செலவினங்களுக்காக 5,000(அய்யாயிரம்)பொற்காசுகளை கொடையாக வழங்கி அதை கோவிலின் கருவூலத்தில் சேர்த்தார்....
அந்த கொண்டாம்தான் இந்த விழா....
எத்தனையோ முறை கோயிலுக்கு சென்றபோதும் கண்ணில் படவில்லை சிவ தொண்டன்......கல்வெட்டுகளில் இதை படித்து விட்டு சிவதொண்டனை தேடினேன்... 808 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆறகழூர் செல்வ சீமான் இன்று என் கண்களுக்கு சிக்கினார்...
அப்பர்,சுந்தரர்,சம்மந்தர் சிலைகளுக்கு முன்புறம் உள்ள தூணில் அழகு மிளிர நிற்கிறார் சிவ தொண்டன்....
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் பல மன்னர்கள்,அரசிகள் உருவம் தெரிந்த போதும் அவர்கள் யார்..?அவர்கள் பெயரென்ன என்பதை அறிய முடியவில்லை.....ஆனால் சிவ தொண்டன் உருவத்துக்கு மேலே செல்வன் சிவத்தொண்டன் என்ற கல்வெட்டு குறிப்பு உள்ளது.....
800 வருடத்துக்கு முன் எங்கள் ஆறகழூரை சார்ந்த ஒரு முன்னோரின் முகம் பார்த்ததில் மனம் துள்ளி குதிக்கிறது
நீங்கள் காமநாதீஸ்வரர் கோவிலுக்கு வரும் போது இந்த சிவ தொண்டனை கண்டு களியுங்கள்....
அக்காலத்தில் ஒரு பொற்காசு என்பது 100 சோழிய காசுகள்..
சிவதொண்டன் 5,000 பொற்காசுகள் கொடுத்தது அக்காலத்தில் ஆறகழூரின் வளமையையும் செல்வ செல்வ செழிப்பையும் உணர்த்துவதாகவே உள்ளது.....
செவ்வாய், 20 ஜனவரி, 2015
வியாழன், 8 ஜனவரி, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










