புதன், 1 மே, 2019

pottaneri- பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு

பொட்டனேரி வட்டெழுத்து கல்வெட்டு



தமிழ் மொழியானது துவக்கத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்த போது ஒலியில் துவங்கி பின் குறியீடுகள்,சித்திரங்கள்,பாறை ஓவியங்கள் என தொடர்ந்து தமிழி,வட்டெழுத்து,என வளர்ந்து இன்று நாம் கானும் வடிவில் செம்மையடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மக்கள் தங்கள் உணர்வுகளை செய்திகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி என்ற கிராமத்தில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த செய்தி தினமணி,தினத்தந்தி நாளிதழ்களிலும், தினமணி,தினத்தந்தி,விகடன்,நக்கீரன்,சத்யம் ,பி.பி.சி,nntv web ஆகிய இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. செய்தியை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தினமணி சரவணன்,தினத்தந்தி திரு வேலுமணி,விகடன் வெற்றி, நக்கீரன் பகத்சிங் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

                                         
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
மேச்சேரியை சேர்ந்த கோ.பெ.நாராயணசாமி ஆசிரியர், வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.இராஜகோபால்,கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம்,சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவுன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.அப்போது அங்குள்ள வரதராஜபெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

                                                இக்கல்வெட்டின் உயரம் 70 செ.மீ. அகலம் 65 செ.மீ. தடிமன் 10 செ.மீ ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை. 8 வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டு உள்ளது. இதன் முதல் இரு வரிகளும் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது. இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாக கருதலாம். எழுத்தமைதியானது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது. கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும் பின் வட்டெழுத்திலும், 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டன.
வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால் நிலம் யாருக்கு, எதற்காக கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை. கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள் வாளாக இருக்கலாம்.
வாணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி,கிருஷ்ணகிரி,செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்து உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரை தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை நேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8 ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் ஒரு சமணதீர்தங்கரரின் சிலை காணப்படுகிறது. ஏற்கனவே தமிழக தொல்லியல்துறை இதை பதிவு செய்திருந்தாலும் தற்போது பாதுகாப்பு , பராமரிப்பு இன்றி உள்ளது.. சேலம் மாவட்டத்தில் சமணம் செழித்து இருந்தமைக்கு ஆதாரமாக ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோயிலில் சமணத்தை சேர்ந்த ஒரு தீர்த்தங்கரர், அம்பிகா யட்சி, வெள்ளக்கல்லால் ஆன ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. பொட்டனேரி தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இணையதள இணைப்புகள்

https://www.sathiyam.tv/inscription-found/?fbclid=IwAR2XED-RvWZ_U606M1QfcfuiGzz2tpI405EzQiRwrx8UEg7t1qV4oZIAM9Q

https://www.dinamani.com/tamilnadu/2019/apr/29/1200-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3142023.html?fbclid=IwAR2j29JrNG-5wWtcxZ7LIGBdfDCYeQtWjcwZR6GbOejK_FlVCRRBCK-giI8


https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-district-mettur-teacher?fbclid=IwAR3HdcPz-Yn9NDeYeH9f6UkPaeT7RafUZy3tejUGV8PlhwFxzU4Cz3UrO4E

https://cfcm.salemonline.in/article/1200-year-old-stone-inscription-found-in-potteneri-2858673?fbclid=IwAR1Ly32YP-KK8Yex5gAB3YXOt0nD-OvFYFvcuwpimzqUovPyqyi1RpVbu8k

http://www.nntweb.com/news-view.php?nid=1097&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%201200%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&fbclid=IwAR1fzobMWpajnOH7qDw0U3dwAloRiA6PIPQt-J1QI-q23Xwak-RxM1mOx7shttps://www.vikatan.com/news/spirituality/156278-found-new-vattezhuththu-inscription-found-near-mettur.html?fbclid=IwAR0VFMYLRwu-rh2ElNs_JqaL5eJSlGcLnJBo4pnUu04aZ5xLrmOh3t7yHCk








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக