திங்கள், 10 பிப்ரவரி, 2014

500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேர் ஆறகழூர் காமநாதீஸ்வரர்






























மீண்டும் ஒரு முறை இன்று 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் தேரில் உள்ள சிற்பங்களை படம் எடுத்தேன்...கடவுள் சிற்பங்களும் உடன் ஆறகழூரை ஆண்ட வாணர்கள்,சோழர்,பாண்டிய,வியயநகர பேரரசர்கள்,கெட்டி முதலி வம்சம் இதில் யோரோ சிலர் சிற்பங்களும் இருக்க கூடும்..ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாய் ஒன்று தெரிகிறது..தேருக்கு அருகே உள்ள மேடையை 5 வயது முதல் பார்த்து வருகிறேன்.ஆனால் அதன் மீது ஏறி பார்த்ததில்லை இன்று ஏறி பார்த்தேன்..2 சூலாயுதம் வைத்திருக்கிறார்கள்..அந்த படிகளிலும் கூட கல்வெட்டுகள் உள்ளன..கல்வெட்டு படிக்க தெரிந்த நண்பர்களை கூட்டி வந்து இங்கும் கோவிலிலும் உள்ள கல்வெட்டுகளின் பொருளை அறிய வேண்டும்..



2 கருத்துகள்: