செவ்வாய், 22 செப்டம்பர், 2015

aragalur-ஆறகளூர் பகுதியில் அவுரி சாய தொழிற்சாலை

ஆறகளூர் பகுதியில் அவுரியில் இருந்து சாயம் எடுக்கும் ஆங்கிலேயர் கால சிறிய அளவிலான தொழிற்சாலை

-----------------------------------------------------------------










ஆறகளூர் அருகே உள்ளது இந்திரா நகர் இங்கு ஆங்கிலேயர் காலத்து அவுரியில் இருந்து சாயம் எடுக்க பயன்பட்ட இடத்தை இன்று காலையில் பார்த்தேன்..சிதிலமடைந்து இப்போது யாரும் பயன்படுத்தாத நிலையில் இந்த இடம் உள்ளது..
அவுரி பற்றி சில தகவல்கள் (இணையத்தில் எடுத்தது)
நீலி என சமஸ்கிருதத்திலும் சென்னா என ஆங்கிலத்திலும் அறியப்படும . அவுரி எனும் குறுந் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார்ஐம்பதுஆண்டுகளுக்குமுன்வரை விளை நிலங்களில் ,நெல் அறுவடைக்குப் பின் ,அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார் .அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல ,அவுரி 18 வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும் .அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர் .ஆனால் இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது ,எளிதில் நோய் தாக்கும் படி பூஞ்சையாக மாறிவிட்டார்கள் .
பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது .நமதுபருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.
இன்னும் உலகில்இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது ,நாம் தான் சந்தோஷமாக நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு ,செயற்கை சாயங்களை பயன்படுத்தி தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம்
நீலச் சாயம் எடுப்பதற்காக வங்காளத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் அவுரிச் செடியை கட்டாயப்படுத்திப் பயிரிடச் செய்தனர். அதுதான், இந்திய விவசாயம் பணப்பயிரை நோக்கி வைத்த முதல் அடி.
அவுரிச் செடியில் இருந்துதான் நீலச் சாயம் தயாரிக்கப்படுகிறது. பருத்தித் துணிகளுக்கு அடர் நீல வண்ணச் சாயம் ஏற்ற அவுரிச் செடியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே இண்டிகோ ஏற்றுமதிப் பொருளாக இருந்திருக்கிறது. கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து இண்டிகோ ஏற்றுமதி செய்யப்பட்டதைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.
அந்தக் காலத்தில் சிவப்பு, கறுப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களே சாயமிடுவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றில், அவுரிச் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் நீலச் சாயத்துக்கு பெரும் கிராக்கி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக