புதன், 31 ஆகஸ்ட், 2016

பெத்தநாயக்கன்பாளையம் வீரக்கல்

பெத்தநாயக்கன் பாளையம் வீரக்கல்
-----------------------------------------------------
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஊர் பெத்தநாயக்கன் பாளயம்..
அப்ப எனக்கு ஒரு 8 வயசு இருக்கும் 1972 ஆம் ஆண்டு ஊரெங்கும் ஒரே பரபரப்பா இருந்திச்சி..நான் படிச்ச எலிமெண்டரி ஸ்கூலில் வாத்தியார்கள் எல்லாம் பரபரப்பா இருந்தாங்க....பசங்க எங்களுக்கு ஒண்ணும் புரியல கொஞ்சநேரம் கழிச்சிதான் தெரிந்தது 
பெத்தநாயக்கன் பாளையத்தில் 8 பேர் போலிஸ் துப்பாக்கி சூட்டில் இறந்திட்டாங்கன்னு...
விவசாயிகளுக்கான மின்கட்டணம் 2பைசாவோ 3பைசாவே அரசு ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 விவசாயிகள் பலியாகினர் .
அவர்கள் பெயர்
முட்டாசு.நா.விவேகானந்தன்,க.ஆறுமுகம்,மணி,ச.பிச்சைமுத்து,ச.முத்துசாமி,ந.சாந்தமூர்த்தி,ரா.கோவிந்தராசன்
இவர்களுக்காக அப்போது ஓர் வீரக்கல் வைக்கப்பட்டது..
அந்த வீரக்கல் இதுதான்
இது இப்போதும் பெத்தநாயக்கன்பாளையம் யூனியன் ஆபிஸ் அருகே உள்ளது
ஆறகழூர் வெங்கடேசன் பொன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக