வெள்ளி, 16 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை

இன்றைய தேடலில் கிடைத்த பொக்கிசம்
-----------------------------------------------------------------
காலை 6 மணி சைக்கிள் மெல்ல உருண்டுகொண்டு சென்றது...உடற்பயிற்சிக்காக ஓட்டிய சைக்கிள் வேகம் எடுக்கவில்லை..ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்...கால்கள் பெடல்களை மிதித்துகொண்டும் பார்வை சாலையை நோக்கி இருந்தாலும் மனம் என்னவோ வரலாற்றை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது...
கோட்டைக்கு போலாமா..?
எங்கிருந்து குரல்வருது...!சுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமில்லை..
ஓ..மைண்ட்வாய்ஸ்சுன்னு நெனைச்சி நான் தான் சத்தமா பேசிட்டேன் போல :-)
சைக்கிள் கோட்டையை நோக்கி விரைந்தது...
வசந்த மண்டபத்தின் அருகே உள்ள வீடுகளில் விசாரிக்க துவங்கினேன்
ஏங்க இங்க எதாவது பழங்கால பொருட்கள் இருக்க..?
நீங்க யாரு..?
ஏங்க 10 நாள் முன்பு ஊரும் உணவும் நிகழ்சிக்காக வந்தேனே...
ஓ நீங்களா..!!!1
நிகழ்சி நல்லாருந்திசி..கோட்டைய நல்ல காட்டிருந்தாங்க
எங்க நன்றியையையும் மகிழ்சியையும் Madona Janani க்கு சொல்லிடுங்க....எங்க அப்பா கூட கோட்டையை பத்தி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்...ஆனா இப்ப அந்த புத்தகம் ஒண்ணு கூட இல்லை..
எப்படியாவது ஒண்ணு எனக்கு வேணுமே...
சரிங்க அப்பாகிட்ட கேட்டு பாக்கிறேன்..
என்கிட்ட ஒரு கல்லுதான் இருக்கு ஆகுமான்னு பாருங்க...
வாவ்..வாவ்....சூப்பர்....இது கல் பீரங்கி குண்டுங்க..
ஓ..அப்படியா..????
நாங்க 10 வருசம் முன்பு இங்க வீடுகட்ட குழி தோண்டியபோது 3 பெரிய பானை (முதுமக்கள்தாழி)கிடைச்சுது அது எடுக்கும்போது உடைஞ்சி போச்சி...அதுக்குள்ள எலும்பு ,ஊசி எல்லாம் இருந்திச்சி..
சூப்பரூஊஊஊஊஊ
அது எல்லாம் இருக்குங்களா..?
இல்லிங்க..அதையெல்லாம் அப்பவே தூக்கிபோட்டுட்டோம்...
அந்த ஊசி மட்டும் வச்சிருந்தோம்...பையன் ஸ்கூலுக்கு எடுத்திட்டு போனபோது தொலைச்சிட்டான்...
அச்சச்சோ.....எல்லாம் மிஸ்ஸாகுதே....நாமதான் ரொம்ப லேட்டு...
கல் பீரங்கி குண்டை மட்டும் பாத்த திருப்தியோட திரும்பி 
சூடா இரு இஞ்சி டீ குடிச்சிட்டு வாக்கிங்கை முடித்தேன்







ஆத்தூர் கோட்டையில் கல் பீரங்கி குண்டு

1 கருத்து: