வியாழன், 22 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் வசிஷ்டநதி எனப்படும் நிவா நதி

என்று மாறும் இந்த நிலை..???
-------------------------------------------------------
எனக்கு 12 வயசு இருக்கும்போது ஆறகழூர் வசிஷ்டநதியில்(நிவா நதி) தண்ணி பளிங்கு மாதிரி அவ்வளவு வெள்ளையா தெளிவா ஓடும்..ஆறு முழுக்க மணல் நிறைந்திருக்கும்....
நாங்க அந்த மணலில் விளையாடிவிட்டு ஆத்து தண்ணியில் ஆசை தீர ஆனந்தமா குளிப்போம்...
ஆத்து மணலில் ஊத்து தோண்டி தண்ணி குடிப்போம்...
நேத்து ஆத்தூர் கோட்டைக்கு போக வசிஷ்டநதியை கடந்தபோது ஆறு சாக்கடையா மாறிப்போயிருந்தது..சேறும் அதில் புரளும் பன்றிகளுக்கும் புகலிடமாய் இருந்தது...எங்குமே மணல் காணப்படவில்லை....
ஆறுகளையும் ஓடைகளையும் முறையாய் பராமரிக்காமல் கழிவு நீர் செல்லும் சாக்கடையாய் மாற்றிவிட்டோம்....
இப்பவே குடிநீரை காசுகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்திட்டோம்...வருங்காலத்தில் காசு கொடுத்தால் கூட நல்ல குடிநீர் கிடைக்குமா...?
ஆறகழூர் வெங்கடேசன் பொன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக