திங்கள், 19 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை மரபுநடை பயணம்

#ஆத்தூர்கோட்டைமரபுநடைஅக்டோபர்9
ஆத்தூர் கோட்டையில் உள்ள காயநிமலேஸ்வரர் கோயில் 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டில்
திருமேற்றளி உடைய நாயனார் கோயில் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்த கோயிலில் மொத்தம் 5 கல்வெட்டுக்கள் காணப்படுகிறது....
இதில் காலத்தால் மிகவும் பழமையானது
10ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழமன்னன் கோப்பரகேசரி வர்மன் காலத்திய கல்வெட்டாகும்
அடுத்து 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலநகராக கொண்டு ஆத்தூரை ஆண்ட வாணகோவரையரின் கல்வெட்டு உள்ளது..
அடுத்து 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசின் மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன...
இப்போது உள்ள கோட்டை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது...இதுபற்றிய கல்வெட்டுக்கள் எதுவும் கோட்டைக்குள் இல்லை...
பேளூர் செக்கடிப்பட்டி கல்வெட்டு மட்டுமே கோட்டையை பற்றி பேசுகிறது..லெட்சுமணநாயக்கர் கோட்டையை கட்டினாரா..?அல்லது சீரமைப்பு செய்தாரா என்பது ஆய்வுக்கு உரிய ஒர் விசயம்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக