புதன், 25 மார்ச், 2015

aragalur-ஆறககழூரில் காமன் பண்டிகை மற்றும் தெரு கூத்து

காமன் பண்டிகை ....நான் சின்ன வயசில் இருக்கும் போது கூத்து பாக்க 
ஊரே திரண்டு வரும்..இரவு சாப்பிட்டுவிட்டு .பாய் தலையணை எல்லாம் எடுத்திட்டு வந்து விடிய விடிய காமன் கதையை கூத்தா பாப்பாங்க..இப்ப எல்லாம் சுருங்கி போயி பெயரளவுக்கு நடக்குது...நேத்து நடந்த கூத்தின் படங்கள்...அர்ஜுனனின் கதையின் ஒரு பகுதியை கூத்தா நடத்தினாங்க...
காமன் பண்டிகையின் கதை
------------------------------------------------
சிவபெருமானின் தவத்தை கலைக்க பார்வதியால் அனுப்பப்பட்ட மன்மதன் என்றழைக்கப்படும் காமதேவன் காமக்கணை தொடுப்பார். இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[4]. இதைக்கண்ட மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார். கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக