புதன், 19 ஆகஸ்ட், 2015


ஆறகளூர் மகதை தேசத்து சதி கல்










---------------------------------------------------------

இன்னிக்கி வாழ்கையில் ரொம்ப மகிழ்சியான நாள்..கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவரிடம் உங்க வீட்டு பக்கம் ஏதாவது பழைய கல்லில் எழுத்து அல்லது சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்..கொஞ்சம் யோசித்து விட்டு எங்க காட்டுக்கு பக்கத்தில் ஒரு குச்சிகாட்டுக்குள் ஒரு சிலை இருக்குன்னு சொன்னார்..இன்னிக்கி காலையில் எழுந்தவுடன் முதல் வேலையா அந்த காட்டை நோக்கி ஓடினேன்..அரைமணி நேர தேடலுக்கு பின் அந்த இடத்தை கண்டுபிடித்தேன்...வசிஷ்டநதியின் ஓரத்தில் ஒரு கிழங்கு குச்சி காட்டின் நடுவே கணவனும் மனைவியும் த
ம்பதி சமயதராய் என்னை பாத்து சிரித்தார்கள்.ஏண்டா பேராண்டி எங்களை பாக்க வர உனக்கு இவ்வளோ வருசமாச்சா..? நம்ம மகதை தேசத்துக்கு நான் செய்த பணியை சொல்லுடா என சொல்லாமல் சொன்னார்...என் புருசன் போன பின்னடி நான் வாழ்ந்து என்ன சாதிக்க போறன்னு அவரோடையே போயிடலான்னு அவர் கூடவே போயிட்டேன் என்று சொன்ன மாதிரி தோணுச்சி..
ஆடை அணிகலன்களை பாக்கும் போது உயர்ந்த பொறுப்பில் இருந்த போர்படை தளபதி ,செல்வந்தர் மாதிரி தோணுது....
இது நடுகல்லா அல்லது சதி கல்லா????

இது சதிகல்தான் என உறுதிபடுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக