புதன், 19 ஆகஸ்ட், 2015

அழியும் வரலாறு

என்னத்த சொல்ல மக்களின் மூட நம்பிக்கைக்கு அளவே இல்லாம போச்சு......

------------------------------------------------------------------
வழக்கம் போல் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம்..அன்ணே உங்க ஏரியாவில் ஏதாவது கல்வெட்டு பழைய சிலை ஏதாவது இருக்கான்னு கேட்டேன்...
அவர் காடு,இருப்பிடம் எங்க ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் புளியங்குறிச்சி தாண்டி அய்யனார் பாளையம் பாரஸ்டுக்கு பக்கமா இருக்கு.....
அவர் எனக்கு நல்ல பழக்கம்...கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னார்....நீ கேட்பதால் இதை சொல்லுறேன்...வேறு யார் கேட்டிருந்தாலும் இதை சொல்லியிருக்க மாட்டேன் என சொல்ல துவங்கினார்...
ஒரு 40 வருசத்துக்கு முன்னாடி எங்க காட்டு பக்கம் ஒரு 6 சிலைக்கு பக்கமா காட்டுக்குள் இருந்திச்சி...அப்ப ஒரு சமயம் மழை இல்லாமா ரொம்ப வறட்சியா இருந்திச்சி....அப்ப சிலர் ..இந்த சிலை காட்டுக்குள் இருப்பதால்தான் மழை பெய்யலன்னு சொல்லிட்டு இருந்தாங்க....
இதை மூக்கறு சிலைன்னும் சொன்னாங்க...
ஒரு கட்டத்தில் மழை இல்லாமல் ரொம்ப வறட்சி வந்தபோது நாங்க அந்த சிலையை புடுங்கி ஒரு சாக்கில் வைத்து கட்டி...சின்னசேலம் போய்..அங்கு வந்த ரயிலிலில் உள்ள பெட்டியில் அந்த சிலைகளை போட்டுவிட்டு வந்திட்டோம் என சொன்னார்.......
என்னத்த சொல்ல எப்படி எப்படியோ அழியுது நம்ம வரலாறு.. frown உணர்ச்சிலை
— பிரிந்ததுபோல உணர்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக