ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சேலத்தில் அம்மாப்பேட்டை பழனியாண்டி முதலியார் மருத்துவமனை அருகில் உள்ள குத்துக்கல்


சேலம் அம்மாபேட்டையில் 20ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குத்துக்கல்


சேலத்தில் அம்மாப்பேட்டை பழனியாண்டி முதலியார் மருத்துவமனை அருகில் உள்ள குத்துக்கல் இது .கடந்த 20 ஆண்டுகளாக இதை நான் பார்த்து வந்திருந்தாலும் இது குத்துக்கல் என தெரியவில்லை.....

தற்போது வரலாற்று தொல்லியல் ஆர்வம் வந்த பின் இது குத்துக்கல் என தோன்றியது..இந்தக்கல் ரோட்டின் ஓரம் முனியப்பன் என்ற பெயரில் இன்றும் வழிபாட்டில் உள்ளது ஒரு பெரியகல்,அதன் அருகே ஒரு சிறிய கல் என 2 கற்கள் உண்டு..
நான்கு வழி சாலை விரிவாக்கத்தின் போது இந்த குத்துக்கல்லை அகற்றும் முயற்சி நடந்தது...ஆனால் வழிபாட்டில் இருந்தால் மக்கள் அகற்ற விடவில்லை..பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் இன்றும் நம் பார்வையில் உள்ளது...
குத்துக்கல் (menhir) அல்லது நெடுங்கல் என்பது பெரிய நிலைக்குத்தாக நாட்டப்படுகின்ற தனிக் கல்லாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக