செவ்வாய், 21 ஏப்ரல், 2015

ஆறகழூர் கல்வெட்டுக்கள்

...நான் கல்வெட்டுக்களை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவன்..








ஆனால் கல்வெட்டுக்களில் உள்ள செய்திகளை அறியும் ஆர்வம் உண்டு..சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் என் சொந்த ஊர்.11 ,12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள்(பொன்பரப்பின வாணகோவரையன்) ஆறகழூரை தலைநகராய் கொண்டு ஆட்சி செதுள்ளனர் ..எங்கள் ஊர் காமநாதீஸ்வரர் கோவில்,கரிவரதராஜபெருமாள் கோவில்,சோழீசுரன் கோவில் போன்றவற்றில் மொத்தம் 48 கல்வெட்டுக்கள் உள்ளன..நிலதானம் அரசியல் உடன்படிக்கைகள் போன்றவை உண்டு..சோழர்.பாண்டியர்,விஜயநகர பேரரசு கல்வெட்டுக்கள் உள்ளன..நவகண்டம் 6 நடுகற்களும் உள்ளன..இதுமட்டுமன்றி..துண்டு கல்வெட்டுக்களும் ஆங்காங்கே உள்ளன...எங்கள் ஊர் அருகே  தியாகனூரில் 9 அடி மற்றும் 6 அடி உயர புத்தர் சிலைகளும் உள்ளன...என் ஊர் ஆறகழூரின் வரலாற்றை அறிந்து வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாய் உள்ளது. ஒரு மாதம் முன் சூலக்கல் ஒன்றை கண்டுபிடித்தேன்..அதில் கல்வெட்டுக்களும் ப்ன்றி..மற்றும் சில விலங்கு உருவங்கள் உள்ளன..அக்கல்வெட்டை என்னால் படிக்க முடியவில்லை.....எங்கள் ஊரை ஆய்வு செய்து கல்வெட்டுக்களை படித்து உதவி செய்ய உங்களால் முடியமா...?வரலாறு அழிந்து விடகூடாது என்ற ஆவலில் பொன்.வெங்கடேசன் ஆறகழூர்..கைபேசி என் 9047514844....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக