வியாழன், 30 ஏப்ரல், 2015

ஆறகழூர் ..மும்முடி ..தலைவாசல்,மூவேந்தர்கள்,அவ்வையார்


ஆறகழூர் ..மும்முடி ..தலைவாசல்,மூவேந்தர்கள்,அவ்வையார்

-----------------------------------------------------------------------------------------














ஆறகழூரில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் தலைவாசலில் இருந்து ஒரு கி.மீ தொலைவிலும் உள்ள ஊர் மும்முடி..ஆறகழூருக்கும் தலைவாசலுக்கும் இடையே உள்ள இந்த மும்முடி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்..மகதை தலைநகரான ஆறை(ஆறகழூர்)க்கு நுழைவாயிலாக இருந்ததால் அந்த இடம் தலை வாசல் என பெயர் பெற்றது....
வசிஷ்ட நதிக்கரையில் உள்ள தலைவாசல் மும்முடிக்கும் ஒளவை பாட்டிக்கும் உள்ள தொடர்பை பழங்கதை ஒன்று தெரிவிக்கிறது..
ஒரு முறை சேர,சோழ,பாண்டிய மன்னர்களுக்கிடையே எல்லைபிரச்சினை வந்த போது...எல்லைகளை தீர்மானிக்க அவ்வையை வேண்டினார்களாம்..அவ்வை மூவேந்தர்களையும் இவ்விடத்தில் சந்திக்கவைத்து பிரச்சினையை தீர்த்தாராம்...
இதற்க்கு ஆதாரமாக இன்றும் மும்முடியில் வசிஷ்ட நதியின் கரையில் மும்முடியாண்டவன் கோயில் இருக்கிறது...
1970 களில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் போது இக்கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளிருந்த சிலைகள் பலவற்றை அடித்து சென்று விட்டது..இப்போது இது மும்முடியான் அய்யானார் கோவிலாக வழிபாட்டில் உள்ளது....
இந்த கோயிலுக்கு அருகேதான் பல நூற்றாண்டுகளுக்கு முன் வஷிஷ்ட நதியில் சிறிய கல்லணை கட்டி தண்ணீரை திருப்பி ஆறகழூர் ஏரி,தியாகனூர் ஏரிக்கு தண்ணீர் வர வழி செய்யப்பட்டுள்ளது..
மூவேந்தர்கள்,அவ்வையார்,மும்முடியான் கோவில் ,வசிஷ்ட நதி தடுப்பணை இவை அனைத்தும் முமமுடியின் பெயரோடு தொடர்புடையவை,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக