செவ்வாய், 18 மார்ச், 2014

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே தியாகனூரில்(2 புத்தர் சிலைகள் உள்ள ஊர்)பெருமாள் கோவில் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு..

----------------------------------------------------------------------------------------------
காலம்: 12 ஆம் நூற்றாண்டு

அரசன்: வாணகோவரையன்

செய்தி:ஆறகளூர் மலை மண்டலப் பெருமாள் கோவில் ஆராதனைக்கும் ,திருப்பணிக்கும் முதலாக,மகத மண்டலத்தை சேர்ந்த தொழுவூரில் வாரப்பற்றாக ஆயிரங்குழி நிலமும் பொன் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திருவிடையாட்டமாக இக்கோவில் ஸ்ரீ வைணவரிடத்தில் கொடுக்கப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------
கல்வெட்டு:

ஸ்வஸ்த்ஸ்ரீ அருளிச் செயல் ஆறகழூர் மலை மண்டலம்

பெருமாள் கோயில் திருப்பதி சிலைஷ்வைற்ற

இந் நாயனார்கு திருவாராதனமும் திருப்

பணிக்கு


உடலாக மகதமண்டலத்துத் தொழுவூர் வராபற்று

   நன்செய் நிலத்திலே பதினெட்டாவது பிசானம்

   முதல்பெற ஆயிரக்குழிபொ

ஸ்வரி உள்ளிட்ட அலைத்தாயங்களும் திருவிடையாட்ட

     இறையிளியாகத் தந்தோம்.இந்நிலங்கைக்

     கொண்டு இந்நாயனார்ளத் திருவா

ராதனமும் திருப்பணியும் நடத்தவும்.  இப்படிக்குத் திரு

      விடையிட்ட இறைஇனியாக சந்திராதித்

       தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பி

       லும்

வெட்டிச்சொல்வாழி  ஆயிரத்துக்கும். இவை

  வாண கோவரையன் எழுத்து .


1 கருத்து: