வெள்ளி, 29 மே, 2015

அம்பாயிரம்மன் தேர் திருவிழா-பெரியேரி.


ஒவ்வொரு கிராமங்களிலும் துர்கை வழிபாடு பழங்காலங்களில் சிறப்பாகவே நடைபெற்று வந்துள்ளது

 ஊருக்கு ஊர் பெயர் மாறினாலும் காவல் தெய்வமாக இருந்து வருகிறது...
ஆறகழூர் துர்க்கையின் பெயர் அம்பாயிரம்மன்..எதிரியின் மீது ஒரே நேரத்தில் ஆயிரம் அம்புகளை எய்ததால் அம்பாயிரம்மன் என பெயர் பெற்றதாய் வாய் வழி செய்திகள் தெரிவிக்கின்றன..
ஆறகழூர் பெரியேரி இரண்டும் ஒரே ஊராய் இருந்த போது கட்டப்பட்டதால் இரண்டு ஊருக்கும் பொதுவானதாய் இருந்து வருகிறது..பூசாரிகளும் இரு ஊரை சார்ந்தவர்களே...திருவிழா முற்காலத்தில் ஒன்றாகவும்..சில நூற்றாண்டுகளாய் தனித்தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது....
தேர் முடிந்து மறு நாள் துர்க்கைக்கு ஒரு எருமை கிடா பலி கொடுக்கப்படும்...இரு ஊரை சார்ந்தவர்களும் தங்கள் கொடுவாளால் வெட்டுவார்கள்..
தேருக்கு ஒரு வாரம் முன் கடவுள் சிலைகளை ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரன் கோவிலில் இருந்து வாங்கி செல்ல பெரியேரி மக்கள் மேளதாளம் பல்லாக்கோடு வந்து வாங்கி சென்று தங்கள் ஊரில் உள்ள கோவிலில் வைத்து வழிபடுவார்கள்..அந்த நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு..
ஜீன் 2ம் தேதி 52 ஆண்டுகளுக்கு பின் பெரியேரி கிராமத்தின் சார்பில் தேர்திருவிழா நடைபெற உள்ளது..

      .15 ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.காமநாதன் முதலியார் தலையில் ஆறகழூரின் சார்பாக அம்பாயிரம்மன் தேர் நடைபெற்றது. அப்போது எருமை குளத்தின் அருகே வெட்டப்பட்டது...இப்போது 52 ஆண்டுகளுக்கு பின் பெரியேரியின் சார்பாக அம்பாயிரம்மன் தேர் நடத்தப்படுகிறது











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக