வெள்ளி, 29 மே, 2015

ஆறகழூர் வணிக குழுவின் கல்வெட்டு







சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள-ஆறகழூர் வணிக குழுவின் கல்வெட்டு


ஆறகழூர் கோட்டைகரையை தாண்டி அகழியின் அருகே இந்த கல் உள்ளது.நீண்ட காலமாக இந்த கல் பற்றி அறியப்படாமல் இருந்தது..இதன் புகைப்படத்தை நான் முகநூலில் இட்டு கேட்டபோது தொல்லியல் அறிஞர்கள் இது வணிக குழுவின் கல்வெட்டு எனவும் 13 ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனவும் தெரிவித்தனர்..இந்த கல்லில் இன்னும் ஆராய வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன..
      

          இந்த கல்லானது முக்கால் வாசி பூமியின் மேலும் கால் வாசி பூமிக்கு அடியிலும் இருப்பதை போல் தோன்றுகிறது.வெளியில் காணப்படும் பகுதியில் கல்வெட்டு ஏதும் காணப்படவில்லை...முன்பு ஒரு முறை இதை பதிந்து கேட்டபோது திரு Sankara Narayanan G அவர்கள் இதில் மங்கல பொருட்கள் இருக்கின்றன..வணிக கல்வெட்டாக இருக்கும் என்று கூறினார்..?வணிக கல்வெட்டுக்கு என தனி அடையாளம் (இலக்கணம்) உள்ளதா..?இந்த வணிக கல்வெட்டுக்களின் நோக்கம் என்ன..? எங்கள் மகதை தேசன் 11ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து 13ஆம் நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் இருந்தது..வணிகர்கள் மற்றும் வழிபோக்கர்களுக்கு வழிகாட்ட மகதை பெருவழிக்கல் காஞ்சிபுரம் என்ற மைல்கல் எங்கள் காமநாதீஸ்வரன் கோவிலில் இருந்தது..இப்போது அது அருங்காட்சியகத்தில் உள்ளது....இந்த வணிககல் அப்போது கோட்டை இருந்த இடத்தில் இப்போது வயல்வெளியாக உள்ள இடத்தில் உள்ளது..



      
இந்த வணிகக் கல்வெட்டுகளெல்லாம் அந்தக் காலத்தில் குழுவாக வணிகம் செய்வோர் போகும் போது 
அங்காங்கே தங்கியே செல்ல வேண்டியதிருந்தது,அப்போது ஆங்க்காங்கே இருக்கின்ற அரசியல் தலைகளுக்குட்பட்டே வியாபாரம் நடத்த வேண்டியிருந்தது, அந்த நிலையையும்,சில பிரச்சினைகளையும் தீர்த்தாற்பொருட்டே இந்த கல்வெட்டுகள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக