வியாழன், 14 மே, 2015

காமக்காபாளையம் கல்வெட்டு


மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பைக் சட்டென்று நின்றது..காமக்காபாளையம் என்ற ஊரின் பெயரை படித்தவுடன்..

காமநாதீஸ்வரர்----காமக்காபாளையம் இது இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ மனம் யோசித்தது....
பைக் ஊருக்குள் திரும்பியது...உயர்ந்து நின்ற கோபுரத்தை நோக்கி பயணித்தது...ஒரு பழைய சிவன் கோவில் ஆனா அது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருந்தது...கோவிலும் பூட்டியிருந்தது..
கோவிலின் முன் வழக்கம் போல் நம் மக்கள் அறுவடை செய்த எள்ளை காயவைத்து உதிர்த்து கொண்டிருந்தனர்.....
ஏங்க இங்க எங்காவது தனியா சிலையோ அல்லது எழுத்துக்கள் அடிச்ச கல்லோ இருக்கா..?
இங்கயா...?அப்படி ஏதும் இல்லையே இது ஒரு இளைஞரின் குரல்...
ஏம்பா அந்த முள்ளு காட்டுகிட்ட 2 கல்லு இருக்கே..அங்க கூட பொம்பளங்க..தீட்டானவங்க போவ கூடாதும்பாங்களே...50 வயது மதிக்கதக்க ஒரு பெண் குரல்....
அட ஆமாம்....அந்த இளைஞருடன் சற்று தொலைவு நடந்தவுடன்
அடர்த்தியாய் முள் வளர்ந்திருந்த ஓர் இடத்தை சுட்டி காட்டினார்..
அய்யோ இதுக்குள்ள எப்படி போறது...?
ஆனாலும் விட்டுப்போக மனமில்லை....
மெள்ள முள்ளை விலக்கி விலக்கி உள்ளே நுழைந்தேன்..உடல் முழுக்க முற்களின் கீரல்கள்...இன்னும் கொஞ்சம் முன்னேறியபோது
2 கற்கள் தென்பட்டன....மனதில் உற்சாக வெள்ளம்...
ஆனால் கிட்ட நெருங்க முடியல...கையை மட்டும் நீட்டி குத்து மதிப்பாய் காமிராவில் படம் எடுத்தேன்....சில படங்களும் சில எழுத்துக்களும் உள்ளன...இது என்ன கல்லாக இருக்கும்....?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக